கோவில்பட்டியில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு; 12 பள்ளி வாகனங்களில் குறைகள் கண்டுபிடிப்பு

தமிழ்நாடு அரசு ஆணையின்படி ஆண்டுதோறும் பள்ளி வாகனங்களை மாவட்ட அளவிலான குழுவினர் ஆய்வு செய்யவேண்டும். அதன்படி இன்று காலை கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு நடத்தபட்டது.
கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்போது 79 பள்ளிகளை சேர்ந்த 265 வாகனங்கள் உள்ளன. அவற்றில் இன்று 199 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்ட 12 வாகனங்களுக்கு குறைகளை சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வில் தகுதியாக இருந்த 187 வாகனங்களுக்கு முன்புற காற்று தடை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அனுப்பி வைக்கபப்ட்டது. இந்த ஆய்வை கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, வட்டாட்சியர் வதந்த மல்லிகா, வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத், பள்ளி கல்வித்துறை ஆய்வாளர் ரமேஷ், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.
பள்ளி வாகன ஓட்டுனர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு தீவிபத்து மற்றும் தடுப்பு விழிப்புணர்வு நிகழச்சி நடந்தது/ தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரராஜ் தலைமையிலான குழுவினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

அவசரகால 108 தொழில்நுட்பனர் மகேஸ்வரி, ஓட்டுனர் மற்றும் உதவியாளர்களுக்கு விபத்தின் பொது முதலுதவி அழிப்பது குறித்தும் ஓட்டுனர் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பு குறித்தும் விளக்கம் அளித்தார்.
மேலும் ஆய்வுக்கு உட்படுத்தாத வாகனங்கள் மற்றும் குறைகள் கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்கள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி சான்றிதழ் பெற்ற பின்பே பொதுச்சாலையில் இயக்க வேண்டும்.அவ்வாறு சான்றிதழ் பெறாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அனுமதி சீட்டின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தெரிவித்தார்.
