• June 7, 2025

Month: April 2023

செய்திகள்

குற்றாலத்தில் குற்றாலநாதர் கோவிலில் சிறப்பு குருபூஜை

குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் இந்து திருநாவுக்கரசருக்கு சதய நட்சத்திரத்தில் சிறப்பு குருபூஜை நடைபெற்றது.கோவில்பட்டிகிழக்குஊடகப்பிரிவு பிரிவு ஒன்றிய தலைவர் குமார் தலைமையில் குடும்பத்தினர் நடத்தினார்கள். 63 நாயன்மார்கள் உள்பட அனைத்து சுவாமிகளுக்கும் அனைத்து பாலபிஷேகம் செய்து பூஜைசெய்து மாலை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பா. ஜனதா ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து கலந்து கொண்டார்

செய்திகள்

அண்ணாமலை, அரசியலில் கத்துக்குட்டி -டி. ஜெயக்குமார் சொல்கிறார்

சென்னை தலைமைக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.கட்சி ஏற்கனவே வலிமையாக இருக்கின்ற சூழ்நிலையில் அதனை மேலும் வலிமைப்படுத்துவதற்குண்டான அந்த வழிமுறைகள் எல்லாம் கலந்தாய்வு செய்யப்பட்டு ஒரு நிறைவான எண்ணத்துடன்.ஒரு மகழ்சியான மனதுடன் செயற்குழு எழுச்சியோடு நடைபெற்றது.ஆகஸ்ட் மாதம் நடைபெறும் கழக  மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும் கேள்வி :=  கர்நாடக தேர்தல் குறித்து ஏதாவது முடிவு எடுக்கப்பட்டதா?பதில் : – கர்நாடகாவில் கழகம் போட்டிடுவது குறித்து  பொதுச்செயலாளருக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து […]

செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி ; செயற்குழுவில் தீர்மானம்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து, பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.இந்நிலையில், பொதுச்செயலாளர் தேர்வுக்கு ஒப்புதல் வழங்க அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள், அதிமுக மாநில […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே பொன்னேர் திருவிழா; டிராக்டர்களுக்கு பூஜை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், பிள்ளையார்நத்தம் கிராமத்தில் இன்று பொன்னேர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா ஊரில் உள்ள விவசாய சங்க கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அத்துடன் அனைத்து பூஜை பொருட்களுடன் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு, அப்பாசாமி நாயக்கர் நிலத்தில் விவசாயிகள் டிராக்டடகளை நிறுத்தி, குமார் ஆசாரி(தச்சர் ), ஆறுமுகம் ஆசாரி(கொல்லர் ) ஆகியோர் பூமி மாதாவுக்கு பூஜை நடத்தினார்கள். அங்கு சிறு அளவில் பசு சாணம் கொண்டு, பிள்ளையார் உருவாக்கி பூஜை செய்து […]

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்ப திருவிழா;பக்தர்கள் சுவாமி தரிசனம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 11-ம் நாளான நேற்று நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் தெப்பத்திருவிழா நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு சுவாமி -அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. மாலை 5 மணிக்கு ரிஷப வாகனங்களில் பூவனநாதர்- செண்பகவல்லி அம்மன் திருவீதி உலா டி.பி.ஆர்.மணி, எம். கோபி குழுவினர் நாதஸ்வர இசையுடன் புறப்பட்டு, எட்டயபுரம் ரோடு, மாதாங்கோவில் ரோடு, […]

செய்திகள்

அ.தி.மு.க.வுக்கு மறைமுக மிரட்டல் விடும் அண்ணாமலையின் பாச்சா பலிக்காது ; டி. ஜெயக்குமார்

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில்  திருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நீர் மோர் பந்தல் திறக்க பட்டது. முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் இதில் கலந்து கொண்டார்.இதனை தொடர்ந்து டி. ஜெயக் குமார் அளித்த பேட்டியின் போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:- கேள்வி: அண்ணாமலை தமிழகத்தில் ஆண்ட கட்சிகளின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளாரே-பதில் :-திமுக ஊழல் செய்ததாக கூறப்படும் 1 […]

கோவில்பட்டி

சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் நீர் மோர் பந்தல்

கோவில்பட்டியில் செண்பகவல்லியம்மன் – பூவனநாதசுவாமி திருக்கோவில் பங்குனி திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியான தெப்பத்திருவிழாவினை முன்னிட்டு திருவிழாவினை காண செல்லும் பொது மக்களுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் மற்றும் 14வார்டு திமுக சார்பில் நகர்மன்ற உறுப்பினர் தவமணி ஏற்பாட்டில் இலவசமாக தர்பூசணி, நீர், மோர் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நகர்மன்ற உறுப்பினர் தவமணி தர்பூசணி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.தெப்பத் திருவிழாவினை காணச்சென்ற குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் நீண்ட […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரசார் கைது

ராகுல்காந்தியின் எம்.பி.பதவி ரத்து செய்யப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் ரெயில் மறியல் நடத்தபோவதாக காங்கிரசார் அறிவித்து இருந்தனர், அதன்படி இன்று ரெயில் நிலையம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் மாநில பொது குழு உறுப்பினர் பொன்னுசாமி பாண்டியன் தலைமையில் காங்கிரசார் குவிந்தனர். கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன், வட்டார தலைவர் ரமேஷ் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ரெயில் நிலியம் முன்பு அமர்ந்து கோஷம் எழுப்பினார்கள். மாநில பொது குழு உறுப்பினர் மகேஷ்குமார், […]

தூத்துக்குடி

 மீன்வளத்துறை ஊழியர்கள் முதல் மாநாடு தூத்துக்குடியில் நடந்தது

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை ஊழியர்கள் முதல் மாநாடு தூத்துக்குடியில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் இரா.நடேச ராசா தலைமை தாங்கினார்,. மாநில இணைச் செயலாளர் செ. சுபைராபானு முன்னிலை வகித்தார்.  மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெ.சேவியர் பிரின்ஸ், ரா.ராஜ் மோகன், இரா.ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்,   தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் மு.கார்த்திகேயன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.எஸ். […]

ஆன்மிகம்

சிவாலய ஓட்டம்- புராண வரலாறு

சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் கன்னியாகுமரியில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு சிவாலய ஓட்டம் ஆகும். இவ்வழிபாடு மாசி மாதம் நடைபெறுகிறது. சிவராத்திரியின் முதல் நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, “பத்மனாதபுரத்தைச் சுற்றியுள்ள பன்னிரு சைவத் திருத்தலங்களையும் 24 மணி நேரத்தில் ஓடி வலம் வருகின்றனர்”. சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர்.  இதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கையில் ஓலை விசிறியுடனும் ஒரு […]