அண்ணாமலை, அரசியலில் கத்துக்குட்டி -டி. ஜெயக்குமார் சொல்கிறார்

சென்னை தலைமைக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.
கட்சி ஏற்கனவே வலிமையாக இருக்கின்ற சூழ்நிலையில் அதனை மேலும் வலிமைப்படுத்துவதற்குண்டான அந்த வழிமுறைகள் எல்லாம் கலந்தாய்வு செய்யப்பட்டு ஒரு நிறைவான எண்ணத்துடன்.ஒரு மகழ்சியான மனதுடன் செயற்குழு எழுச்சியோடு நடைபெற்றது.
ஆகஸ்ட் மாதம் நடைபெறும் கழக மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும்
கேள்வி := கர்நாடக தேர்தல் குறித்து ஏதாவது முடிவு எடுக்கப்பட்டதா?
பதில் : – கர்நாடகாவில் கழகம் போட்டிடுவது குறித்து பொதுச்செயலாளருக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து பொதுச்செயலாளர் உரிய அறிவிப்பை வெளியிடுவார்.இது தொடர்பாக செயற்குழு பொதுச்செயலாளருக்கு அதிகாரத்தை அளித்துள்ளது.
கேள்வி : பாஜக அதிமுக குறித்து கடுமையான விமர்சனம் வைத்துள்ளதே?
பதில் :- அண்ணாமலை பாஜக தலைவர்.அவர் ஒரு கருத்தை சொல்கிறார்.அதற்கு கழகத்தின் சார்பில் நான் பதில் சொல்கிறேன்.அதுபோல தலைமைக்கழக நிர்வாகிகள் கருத்து சொன்னார்கள்.கழக பொதுச்செயலாளர் இது குறித்து அழகாக ஒரு கருத்தை சொன்னார்.அரசியல் முதிர்ச்சி வேண்டும் என்றார்.
என்னுடைய சர்வீஸ் 50 வருடம்.இங்கு இருப்பவர்களின் சர்வீஸ் கிட்டதட்ட 30 வருடங்கள்.அவருக்கு அரசியலில் 2 வருடம்தான் சர்வீஸ்.அரசியலில் கத்துகுட்டி என்று சொல்லாம்.
அரசியலில் முதிர்ச்சி இல்லாதவர்கள் குறித்து நான் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லிவிட்டார் பொதுச்செயலாளர்.அதைதான் நானும் சொல்ல முடியும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் கழகம் அங்கம் வகிக்கிறது.தமிழகத்தை பொறுத்தவரையில் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளது. இது கூட்டணி. நீங்கள் திமுக மீது குற்றச்சாட்டு வையுங்கள்.திமுக என்பது குடும்ப ஆதிக்கம்.ஊழலில் திழைத்து,ஊழலில் உருவெடுத்து ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி. ஊழலுக்கு சொந்தகார இயக்கம் என்றால் திமுக. அதனை தோலுறியுங்கள்.எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆட்டை கடித்து,மாட்டை கடித்து மனிதனை கடித்த கதையாய் எங்கள் மீது ஏன் வருகிறீர்கள்.வளர்த்த கடா மார்பில் பாயக்கூடாது. அது கிடவாக இருந்தாலும்,ஆடாக இருந்தாலும் சரி எங்களை பொறுத்தவரையில் நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம்.
அண்னா சென்னை தலைமைக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.
கட்சி ஏற்கனவே வலிமையாக இருக்கின்ற சூழ்நிலையில் அதனை மேலும் வலிமைப்படுத்துவதற்குண்டான அந்த வழிமுறைகள் எல்லாம் கலந்தாய்வு செய்யப்பட்டு ஒரு நிறைவான எண்ணத்துடன்.ஒரு மகழ்சியான மனதுடன் செயற்குழு எழுச்சியோடு நடைபெற்றது.ஆகஸ்ட் மாதம் நடைபெறும் கழக மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும்.இவ்வாறு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு
கேள்வி : கர்நாடக தேர்தல் குறித்து ஏதாவது முடிவு எடுக்கப்பட்டதா
பதில் : கர்நாடகாவில் கழகம் போட்டிடுவது குறித்து கழக பொதுச்செயலாளருக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து கழக பொதுச்செயலாளர் உரிய அறிவிப்பை வெளியிடுவார்.இது தொடர்பாக செயற்குழு பொதுச்செயலாளருக்கு அதிகாரத்தை அளித்துள்ளது.எனவே இது தொடர்பாக அவர் முடிவை அறிவிப்பார்.
கேள்வி : பாஜக அதிமுக குறித்து கடுமையான விமர்சனம் வைத்துள்ளதே
பதில் : அண்ணாமலை பாஜக தலைவர்.அவர் ஒரு கருத்தை சொல்கிறார்.அதற்கு கழகத்தின் சார்பில் நான் பதில் சொல்கிறேன்.அதுபோல தலைமைக்கழக நிர்வாகிகள் கருத்து சொன்னார்கள்.கழக பொதுச்செயலாளர் இது குறித்து அழகாக ஒரு கருத்தை சொன்னார்.அரசியல் முதிர்ச்சி வேண்டும் என்றார். என்றுடைய சர்வீஸ் 50 வருடம்.இங்கு இருப்பவர்களின் சர்விஸ் கிட்டதட்ட 30 வருடங்கள்.அவருக்கு அரசியலில் 2 வருடம்தான் சர்வீஸ்.அரசியலில் கத்துகுட்டி என்று சொல்லாம்.அரசியலில் முதிர்ச்சி இல்லாதவர்கள் குறித்து நான் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லிவிட்டார் பொதுச்செயலாளர்.அதைதான் நானும் சொல்ல முடியும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் கழகம் அங்கம் வகிக்கிறது.தமிழகத்தை பொறுத்தவரையில் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளது. இது கூட்டணி. நீங்கள் திமுக மீது குற்றச்சாட்டு வையுங்கள்.திமுக என்பது குடும்ப ஆதிக்கம்.ஊழலில் திழைத்து,ஊழலில் உருவெடுத்து ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி. ஊழலுக்கு சொந்தகார இயக்கம் என்றால் திமுக. அதனை தோலுறியுங்கள்.எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆட்டை கடித்து,மாட்டை கடித்து மனிதனை கடித்த கதையாய் எங்கள் மீது ஏன் வருகிறீர்கள்.வளர்த்த கடா மார்பில் பாயக்கூடாது. அது கிடவாக இருந்தாலும்,ஆடாக இருந்தாலும் சரி எங்களை பொறுத்தவரையில் நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம். அண்ணாமலை என்ன பேயா.பூச்சாண்டியா,பிசாசா,எத்தனையோ பார்த்துவிட்டோம்.கருணாநிதி காலத்திலே அவ்வளவு அடக்குமுறைகள் செய்தார்கள்.கட்சியை ஒழிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டார்கள். எவ்வளவு வழக்குகள்..எவ்வளவு பிரச்சனைகள். ஆனால் அதனை எல்லாம் தாண்டி கழகம் மிகப்பெரிய மாபெரும் இயக்கமாக உருவெடுத்து இன்றும் சரி,இன்றும் 100 வருடங்கள் ஆனாலும் சரி வெற்றி நடைபோடும் இயக்கம் அது கழகம்தான்.அதனால் நாங்கள் பயப்படவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது..எந்த காலத்திலும் கழக தொண்டனுக்கு பயம் என்பது கிடையவே கிடையாது.
கேள்வி : – மதுரையில் மாநாடு நடத்து வதற்கு ஏதாவது காரணம் உண்டா.
பதில் :- அது தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவு எடுத்த விஷயம். தமிழ்நாட்டுக்கு ஒரு மையப்பகுதி என்ற அடிப்படையில் முடிவு செய்துள்ளார்கள்.எங்களுடைய தலைவர்கள் புரட்சித்தலைவரும் சரி,புரட்சித்தலைவி அம்மாவும் சரி மதுரையில் மாநாடு நடத்தியுள்ளார்கள். மதுரையை மீட்ட சுந்தபாண்டியன் என்ற அடிப்படையில் கண்டிப்பாக எடப்பாடியார் தலைமையில் மதுரையில் மாநாடு நடக்கும்போது தமிழகத்தை மீட்டெடுக்கின்ற நிலை கண்டிப்பாக வரும்.
கேள்வி : -ஓ.பன்னீர்செல்வம் அங்கு சென்றுள்ளார் என்று மதுரையில் மாநாட்டை அறிவித்துள்ளீர்களா
பதில் : = ஆண்டிகள் ஒன்றுகூடி மடம் கட்டினால் எப்படி.நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்
