மீன்வளத்துறை ஊழியர்கள் முதல் மாநாடு தூத்துக்குடியில் நடந்தது

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை ஊழியர்கள் முதல் மாநாடு தூத்துக்குடியில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் இரா.நடேச ராசா தலைமை தாங்கினார்,. மாநில இணைச் செயலாளர் செ. சுபைராபானு முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெ.சேவியர் பிரின்ஸ், ரா.ராஜ் மோகன், இரா.ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் மு.கார்த்திகேயன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.எஸ். கிறிஸ்டோபர், மாவட்ட செயலாளர் தே.முருகன் ஆகியோர் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினர்.
பொதுக்குழு உறுப்பினர ச. சண்முகப்பிரியா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் என்.வெங்கடேசன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்துரை வழங்கினார். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.
மாநாட்டில் பேசிய கனிமொழி எம்பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை கலைஞர் வழியில் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். இதுபோல் மீன்துறை ஊழியர்களின் கோரிக்கைகைள நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்புரை ஆற்றினார். விழாவில் மீனவர் நலத்துறை ஆணையர் கே.சு.பழனிச்சாமி சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் த.மகாராஜன் பொதுச் செயலாளர் அறிக்கை, மாநில பொருளாளர் ம.நந்தகுமார் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம் நிறைவுரை ஆற்றினார். பொதுக்குழு உறுப்பினர் கு.சேரந்தையராஜா நன்றி கூறினார்.
மீன்வளத்துறை உதவியாளர் பணிக்கு எழுதப்படிக்க தெரிந்தால் போதும் என்ற முறையை மாற்றி அடிப்படை கல்வித் தகுதி நிர்ணயம் செய்ய வேண்டும். தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்வதை தவித்து நிரந்தர பணியாளர்களை நியமித்து காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நேரடி உதவியாளர் பணியிடம் நிரப்புவதில் இருந்து மீன்வளத்துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும். மீனவளத்துறை மூலம் மீனவர்களுக்கு இலவச வீடுகள் கட்டுக் கொடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
