• June 8, 2025

அ.தி.மு.க.வுக்கு மறைமுக மிரட்டல் விடும் அண்ணாமலையின் பாச்சா பலிக்காது ; டி. ஜெயக்குமார் பேட்டி

 அ.தி.மு.க.வுக்கு மறைமுக மிரட்டல் விடும் அண்ணாமலையின் பாச்சா பலிக்காது ; டி. ஜெயக்குமார் பேட்டி

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில்  திருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நீர் மோர் பந்தல் திறக்க பட்டது. முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் இதில் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து டி. ஜெயக் குமார் அளித்த பேட்டியின் போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி: அண்ணாமலை தமிழகத்தில் ஆண்ட கட்சிகளின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளாரே-
பதில் :-திமுக ஊழல் செய்ததாக கூறப்படும் 1 லட்சத்து 34 ஆயிரம் கோடியை 100 ரூபாயாக அடுக்கினால் நிலாவிற்கு செல்லும் தொலைவில் மூன்றில் ஒரு பங்கு தூரம் வரும்  திமுக ஊழல் பட்டியலில் உள்ள பணத்தை சிபிஐ வருமானவரித்துறை அமலாக்கத்துறையினர் சோதனை செய்து பறிமுதல் செய்தால் அந்த பணம் நாட்டில் உள்ள பாதி கடனை அடைத்து விடலாம்.
எங்களை பொறுத்தவரை மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயப்படவேண்டும்.எங்களுக்கு மடியில் கனமில்லை.,.வழியில் பயமில்லை.எங்களுக்கு சிபிஐ குறித்தோ.அமலாக்கத்துறை குறித்தோ எந்த பயமும் இல்லை.நீங்கள் 1 லட்சத்து 34 கோடி என்று சொல்கிறீர்கள் அல்லவா.இந்த ஆதாரத்தை வைத்து சிபிஐயை முடுக்கிவிடுங்கள்.அமலாக்கத்துறையை முடுக்கிவிடுங்கள்.
முந்தைய ஆட்சி எனும்போது 2006-11 என்றும் சொல்லாம்.1996-2001 என்று சொல்லியிருக்கலாம்
அண்ணாமலையை பொறுத்தவரையில் நான் சவால் விட்டு சொல்கிறேன். அதிமுக ஆட்சிகாலத்தின் சொத்துபட்டிலை நாங்கள் வெளியிடுவோம் என்று சொல்லட்டும். நாங்கள் அனைவரும் சட்டப்படி உள்ளதால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.அவர் அதிமுக என்று சொல்லட்டும்.அடுத்தது எங்கள் பதில் எப்படி வரும் என்பதை பாருங்கள்.முன்னாள் அமைச்சர்கள் குறித்து அவர் சொத்து பட்டியல் வெளியிடட்டும்.அனைத்தையும் நாங்கள் சந்திக்க தயாராக உள்ளோம்.மறைமுகமாக ஒரு பூச்சாண்டி,அதிமுகவுக்கு மிரட்டல் விடுகின்ற வேலை எல்லாம் எங்களிடம் அந்த பாச்சா பலிக்கவே பலிக்காது.
கேள்வி:- ஒரு உதவி ஆய்வாளர் 10 பேர் கும்பலால் கோடம்பாக்கத்தில் நடுரோட்டில்  தாக்கப்பட்டுள்ளாரே
பதில்- சட்டம் ஒழுங்கை பார்த்தால் தமிழகம் சந்தி சிரிக்கும் அளவுக்கு உள்ளது.அடிப்படையில் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு வழங்கவேண்டும்.இதுதான் அரசினுடைய முக்கிய கடமையாக இருக்கவேண்டும்.இரண்டாவது அடிப்படை கட்டமைப்பு வசதி.இரண்டிலும் இந்த விடியா ஆட்சி தோல்வி அடைந்துவிட்டது. 24 மணி நேரம் ஊண்,உறக்கமின்றி,பொதுமக்களை காக்கவேண்டும் என்ற வகையிலே செயல்பட்டுகொண்டிருக்கின்ற காவல்துறை இன்றைக்கு அடிவாங்கும் காவல்துறையாக ஆகிவிட்டது. அம்மாவின் அரசில் ஸ்காட்லாண்டு காவல்துறைக்கு இணையாக நமது காவல்துறைக்கு ஒரு கம்பீரம் இருந்தது.ஆனால் அந்த கம்பீரம் தற்போது உள்ளதா என்றால் இல்லை.போகிறவர் ,வருகிறவர் எல்லாம் தர்ம அடிபோல  அடிக்கிறார்கள்.காவல்துறையின் நிலமை அப்படி ஆகிவிட்டது,.ஏன் இந்த அரசில் காக்கிசட்டை போட்டோம் என்று ஒவ்வொரு காவலரும் நினைத்து கவலைப்படுகிறார்கள். காவல்துறையை சார்ந்தவர் என்றுடைய வேலை போனாலும் பரவாயில்லை என்று தலைமை செயலகத்திற்கு முன்னர் மகளை அழைத்துக்கொண்டு என்னுடைய மகளின் கால் போய்விட்டது.ஒரு சிபிசிஐடி விசாரணை வைக்க மாட்டேன் என்கிறார்கள்,மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்கிறார்கள்,மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள் என்று போராடுகிறார்.இப்படி அனைத்து துறைகளிலும் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது.இந்த இரண்டு வருடத்தில் ஓரு உதவி ஆய்வாளர் இறந்துள்ளார்.பெண் காவல் ஆய்வாளர் கழுத்தை அறுத்துள்ளார்கள். அமைச்சர் நேருவுக்கும்,திருச்சி சிவாவுக்கும் உள்ள பிரச்சனையில் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றது தொடர்பாக காவல்நிலையத்திலேயே காவல் உதவி ஆய்வாளரை அடிக்கிறார்கள் ஆளும் கட்சியினரே சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு,சட்டத்திற்கு புறப்பாக இன்றைக்கு சட்டத்தை யார் கையில் எடுக்கிறார்களே அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்காமல் அவர்களுக்கு கரும்பு கரம் நீட்டினால் எப்படி. இந்த ஆட்சி வந்தவுடன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஓரு தொழிலாளி கொலை தொடர்பாக அவருக்கு ராஜ மரியாதை செய்யப்பட்டு மக்கள் போராடிய பிறகு கைது செய்யப்படுகிறார்.இப்படி ஒவ்வொரு இடத்திலும் அதிகாரிகள் தாக்கப்படுகிறார்கள். காவல்துறையினர் தாக்கப்படுவது வழக்கமாகிவிட்ட ஒன்று என்ற சூழ்நிலையில்  காவல்துறையின் நிலைமை மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கின்றது என்று நினைக்கும்போது வருத்தமாக உள்ளது.

அம்மாவின் ஆட்சியில் சமூக விரோதிகளை ஒடுக்கி அமைதியை ஏற்படுத்திய காவல்துறை இன்றைக்கு அடிவாங்கும் காவல்துறையாக இருக்கின்றதே என்று நினைக்கும்போது மனமெங்கும் பதைக்கிறது. காவல்துறைக்கு என்றுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
எந்த கட்சி வந்தாலும் எங்கள் தலைமையில் தான் கூட்டணி நாங்கள் தான் எத்தனை இடங்கள் கொடுப்பது குறித்து முடிவெடுப்போம்.
.இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *