சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் நீர் மோர் பந்தல்

கோவில்பட்டியில் செண்பகவல்லியம்மன் – பூவனநாதசுவாமி திருக்கோவில் பங்குனி திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியான தெப்பத்திருவிழாவினை முன்னிட்டு திருவிழாவினை காண செல்லும் பொது மக்களுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் மற்றும் 14வார்டு திமுக சார்பில் நகர்மன்ற உறுப்பினர் தவமணி ஏற்பாட்டில் இலவசமாக தர்பூசணி, நீர், மோர் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நகர்மன்ற உறுப்பினர் தவமணி தர்பூசணி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.தெப்பத் திருவிழாவினை காணச்சென்ற குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் நீண்ட வரிசையில் நின்று தர்பூசணி வாங்கி சென்றனர். நீர்,மோர் அருந்தி சென்றனர். இதில் 14வது வார்டு திமுக செயலாளர் தங்கமாரியப்பன், வார்டு பிரதிநிதி பன்னீர்செல்வம், வேலாயுதபுரம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் முருகன், சேர்மக்கனி, தங்கராஜ், மாரியப்பன், மகேஸ்வரி, தமிழ்செல்வி, வரலட்சுமி, கனகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
