கோவில்பட்டி அருகேயுள்ள நாச்சியார்புரத்தில் அரசு உதவி பெறும் இந்து தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் கோசலை, இடைநிலை ஆசிரியராக பானுமதி என்பவர் பணியாற்றி வருகிறார். அந்த பள்ளியில் நிர்வாக செயலாளர் பிரச்சினை தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைக்கு ஊதியம் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 29 மாதங்களாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைக்கு ஊதியம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. […]
கோவில்பட்டியில் “உள்ள பிருந்தாவன் பள்ளி நிர்வாகம் “இலவச கட்டாயக் கல்வி திட்டம் கிடையாது”: என்று மறுப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை பெற்றோர்கள் நேற்று சந்தித்து அளித்துள்ள மனுவில், கூறி இருபதாவது:- கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள பிருந்தாவன் கிட்ஸ் பிரைமரி & நர்சரி பள்ளியில் தமிழ்நாடு அரசின் இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின்கீழ் 100-க்கும் மேற்பட்ட ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த குழந்தைகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்நிலையில் […]
அனைத்து குடும்ப விழாக்களையும் தமிழ்வழியில் நடத்தும் “கரணாசான்” பயிற்சி வழங்குவதற்கான செயல் திட்டம்
உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் கோவில்பட்டி திருக்குறள் மாவட்டம் சார்பாக “கரணாசான்” பயிற்சி வழங்குவது குறித்தான சிந்தனைக் கூட்டம் மாநிலத் துணைத்தலைவர் பேராசிரியர். கருத்தப்பாண்டி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்களின் திருமணம் உள்ளிட்ட அனைத்து குடும்ப விழாக்களையும் தமிழ்வழியில் நடத்தும் “கரணாசான்” பயிற்சி வழங்குவதற்கான செயல் திட்டம் முன்மொழியப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்டச்செயலாளர் க.தமிழரசன், திருவள்ளுவர் மன்றத் துணைத்தலைவர் ச.திருமலை முத்துசாமி, உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் மாநில மக்கள் தொடர்பு அலுவலர் ப.முத்துச்செல்வம், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு […]
புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பூவை மூர்த்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முடுக்குமீண்டான் பட்டி எஸ் டி ஏ சர்ச் தெருவில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் மூர்த்தி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் கனகராஜ், கோவில்பட்டி நகர செயலாளர் ஜெயமணி, கோவில்பட்டி இளைஞரணி செயலாளர் பிரகாஷ் குமார், கோவில்பட்டி மாணவரணி செயலாளர் ராமமூர்த்தி, […]
கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.கோவில்பட்டி ரோட்டரி சங்க உறுப்பினர் முத்து முருகன் முன்னிலை வகித்தார்.பள்ளி தலைமை ஆசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார். கோவில்பட்டி சோலாரிஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செல்பி எடுக்கலாம் வாங்க…என்ற தலைப்பில் மாணவர்களுக்கான சுயதேடல் மற்றும் தன்னம்பிக்கை குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பள்ளி குழு உறுப்பினர்கள் மணிக்கொடி,ராஜா அமரேந்திரன் […]
கோவில்பட்டியில் கட்டில் போட்டு உறங்கும் போராட்டம்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் அறிவிப்பால்
கோவில்பட்டியில் நீதிமன்றங்கள், கோட்டாட்சியர் அலுவலகம், தாலூகா அலுவலகம், கிளைசிறைச்சாலை, கோவில்பட்டி உட்கோட்ட துணைக்கண்காணிப்பாளர் அலுவலகம், கருவூலம், பி.எஸ்.என்.எல் என மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என அனைத்தும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் சேதமடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால், விரைந்து அந்த சாலைகளை சீரமைத்து புதுப்பிக்க வேண்டும், மேலும் ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக சுகாதார வளாகங்கள் கட்டி தர வேண்டும், அரசு பெண்கள் மகளிர் […]
கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையை இடித்துவிட்டு புதிய கடைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கபட்டுள்ளது. புதிய கடைகள் கட்டும்வரை புதிய பஸ் நிலையத்தில் மார்க்கெட் செயல்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது. ஆனால் தினசரி சந்தை வியாபாரிகள் கடையை காலி செய்ய மறுத்து, வேறு இடத்தில் புதிய மார்க்கெட்டை கட்டக்கோரிக்கை விடுத்து வருகிறார்கள. மேலும் புதிய பஸ் நிலையம் பாதுகாப்பு இல்லாத இடம் எனவே நகர்ப்பகுதியில் வேறு இடம் ஒதுக்கும்படியும் கோரிக்கை விடுக்கிறார்கள். அனால் நகராட்சி நிர்வாகம் […]
ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்ககோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் அமளி
தமிழ்நாடு சட்டசபையில் சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த உடன் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்ய இருந்தார்,. இதற்கிடையே எதிர்க்கட்சி துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கக்கோரி அ.தி.மு..க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார். கவன ஈர்ப்பு தீர்மானத்தை முதலில் நிறைவேற்றும்படி சபாநாயகரிடம் அதிமுகவினர் முறையிட்டனர். அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனிதீர்மானத்தை இன்று நிறைவேற்றிவிட்டு நாளை […]
கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் சார்பாக கடலையூர் ரோடு கிழக்கு ஒன்றிய அலுவலகம் முன்பு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தூத்தக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார் பொதுச்செயலாளர்கள் வசந்தராஜ் சந்தானம் மற்றும் மாவட்ட துணை தலைவர் ஆர் பி பாலு மாவட்ட மகளிர் அணி துணை தலைவி அமுதா ஒன்றிய பார்வையாளர் வினோத் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் அம்மன் மாரிமுத்து […]
கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். முதல்-அமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார். தமிழ்நாடு கவர்னருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசு தலைவரை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும் சட்டப்பேரவையில் உள்ள கவர்னர் தொடர்பான சில பதங்களை நிறுத்திவைத்தும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கவர்னருக்கு எதிரான தீர்மானத்துக்கு நான்கில் மூன்று பங்கு ஆதரவு வேண்டும் என்பதால், சட்டப்பேரவையின் கதவுகள் மூடப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது…! […]