பூவை மூர்த்தி பிறந்தநாள் ; 200 பேருக்கு அன்னதானம்

புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பூவை மூர்த்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முடுக்குமீண்டான் பட்டி எஸ் டி ஏ சர்ச் தெருவில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் மூர்த்தி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் கனகராஜ், கோவில்பட்டி நகர செயலாளர் ஜெயமணி, கோவில்பட்டி இளைஞரணி செயலாளர் பிரகாஷ் குமார், கோவில்பட்டி மாணவரணி செயலாளர் ராமமூர்த்தி, கோவில்பட்டி மூர்த்தியார் அணி செயலாளர் ராஜகோபால் மற்றும் எஸ் டி ஏ இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
