அனைத்து குடும்ப விழாக்களையும் தமிழ்வழியில் நடத்தும் “கரணாசான்” பயிற்சி வழங்குவதற்கான செயல் திட்டம்

உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் கோவில்பட்டி திருக்குறள் மாவட்டம் சார்பாக “கரணாசான்” பயிற்சி வழங்குவது குறித்தான சிந்தனைக் கூட்டம் மாநிலத் துணைத்தலைவர் பேராசிரியர். கருத்தப்பாண்டி தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்களின் திருமணம் உள்ளிட்ட அனைத்து குடும்ப விழாக்களையும் தமிழ்வழியில் நடத்தும் “கரணாசான்” பயிற்சி வழங்குவதற்கான செயல் திட்டம் முன்மொழியப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்டச்செயலாளர் க.தமிழரசன், திருவள்ளுவர் மன்றத் துணைத்தலைவர் ச.திருமலை முத்துசாமி, உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் மாநில மக்கள் தொடர்பு அலுவலர் ப.முத்துச்செல்வம், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி தா.நாஞ்சில் குமார் மற்றும் இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாவட்ட துணைத்தலைவர் முனைவர். ஆ.சம்பத்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
