மாணவர்களுக்கான தன்னம்பிக்கை விழிப்புணர்வு முகாம்

கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.
கோவில்பட்டி ரோட்டரி சங்க உறுப்பினர் முத்து முருகன் முன்னிலை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார்.

கோவில்பட்டி சோலாரிஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செல்பி எடுக்கலாம் வாங்க…என்ற தலைப்பில் மாணவர்களுக்கான சுயதேடல் மற்றும் தன்னம்பிக்கை குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பள்ளி குழு உறுப்பினர்கள் மணிக்கொடி,ராஜா அமரேந்திரன் ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் அருள் காந்தராஜ் நன்றி கூறினார்
