கோவில்பட்டியில் பா.ஜ.க.சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் சார்பாக கடலையூர் ரோடு கிழக்கு ஒன்றிய அலுவலகம் முன்பு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்தக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார் பொதுச்செயலாளர்கள் வசந்தராஜ் சந்தானம் மற்றும் மாவட்ட துணை தலைவர் ஆர் பி பாலு மாவட்ட மகளிர் அணி துணை தலைவி அமுதா ஒன்றிய பார்வையாளர் வினோத் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் அம்மன் மாரிமுத்து உள்பட மாவட்ட மாநில ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார்கள்
