கோவில்பட்டி மார்க்கெட் வியாபாரிகள், கடைகளை இடிக்க எதிர்ப்பு

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையை இடித்துவிட்டு புதிய கடைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கபட்டுள்ளது. புதிய கடைகள் கட்டும்வரை புதிய பஸ் நிலையத்தில் மார்க்கெட் செயல்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது.
ஆனால் தினசரி சந்தை வியாபாரிகள் கடையை காலி செய்ய மறுத்து, வேறு இடத்தில் புதிய மார்க்கெட்டை கட்டக்கோரிக்கை விடுத்து வருகிறார்கள. மேலும் புதிய பஸ் நிலையம் பாதுகாப்பு இல்லாத இடம் எனவே நகர்ப்பகுதியில் வேறு இடம் ஒதுக்கும்படியும் கோரிக்கை விடுக்கிறார்கள்.
அனால் நகராட்சி நிர்வாகம் தற்போதைய மார்க்கெட் கடைகளை இடித்து விட்டு புதிய கடைகள் கட்டுவதில் உறுதியாக உள்ளது. இந்த நிலையில் இன்று தினசரி மார்க்கெட் வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்துக்கு நடந்து சென்றனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி செயலாளர் எஸ் ஆர் பாஸ்கரன், மாநில இந்து யாதவர்கள் சங்க தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் வியாபாரிகள் கலந்து கொண்டனர்
நகராட்சி அலுவலகம் சென்றதும் வாசலில் நின்று சிறிது நேரம் கோஷம் எழுப்பினார்கள். பின்னர் ஆணையரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டது இருந்ததாவது:-

எங்களுடைய வாழ்வாதாரம் இந்த மார்க்கெட் கடையை நம்பி தான் இருக்கிறது நாங்கள் ஒரு ஆண்டு முன்பணம் கட்டி இருக்கிறோம் மாத வாடகை சரியாக செலுத்தி வந்து கொண்டிருக்கிறோம் எங்கள் கடை நல்ல நிலைமையில் உள்ளது
அரசு எடுக்க வேண்டும் என்றால் எங்களுக்கு மாற்றாக நல்ல இடத்தில் கடைகள் கட்டி கொடுத்துவிட்டு , மார்க்கெட்டை இடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
இதை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை இல்லை நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள வேண்டியது தான்
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
வியாபாரிகள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் மனு அளித்தனர்.
