கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கோடை விடுமுறையில் திருக்குறள் படித்து குறள் நெறி வழி நடக்க பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி புதுரோடு நகராட்சி நடுநிலை பள்ளியில் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு 2023-24 முத்துச்செல்வம், ரோட்டரி சங்க செயலாளர் மணிகண்ட மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பாராயன் அனைவரையும் வரவேற்றார். பள்ளித் தேர்வு முடிந்து கோடை விடுமுறை […]
கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் செண்பகராஜன் நினைவு தொடக்கப்பள்ளிகூட 89வது ஆண்டு விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர். இதை தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள், ஆடல்,பாடல், பேச்சுப் போட்டி, சிலம்பம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன,. ஆணிப்படுக்கையில் யோகா செய்து மாணவர் மற்றும் மாணவியர் அசத்தினார்கள். பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் […]
தந்தை- மகன் புகழ் பாடும் மன்றமாக சட்டப்பேரவையை மாற்றிவிட்டார்கள்; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு
சென்னை ராயபுரத்தில் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், வழக்கறிஞர் எம்..எம்..கோபி ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கலந்து கொண்டு பாதசாரிகளுக்கு நீர் மோர் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனை குறித்து பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்காமல் மறுக்கப்படுகிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் பேசுவதை நேரலை கொடுக்காமல் இருக்கிறார்கள். தமிழகத்தில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் ஆட்சி என்றால் […]
கோவில்பட்டி தினசரி மார்க்கெட் கடைகளை இடித்து விட்டு புதிய கடைகள் கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்கி உள்ளது,. இதனால் கூடுதல் பஸ் நிலையத்தில் தற்காலிகமாக மார்க்கெட் செயல்படும் என்றும் அங்கு வியாபாரிகள் கடைகள் அமைத்து கொள்ளலாம் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. அனால் வியாபாரிகள் கடைகளை காலி செய்ய மறுத்து விட்டனர், மார்க்கெட் கடைகளை இடிக்க கூடாது. அரு ஒதுக்கிய பணத்தில் வேறு இடத்தில் கூடுதல் மார்க்கெட் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடைகளை காலி […]
தூத்துக்குடியில் புத்தக கண்காட்சி, நெய்தல் கலைத்திருவிழா சிறப்புகள்; கோவில்பட்டியில் ஆட்சியர் செந்தில்ராஜ் பேட்டி
கோவில்பட்டி வித்ய பிரகாசம் மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி மற்றும் ஆரம்ப கால பயிற்சி மையத்தின் 20ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த் விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் கலந்து கொண்டார். விழா முடிவில் ஆட்சியர் செந்தில்ராஜ் , செய்தியாலர்க்ளுகு அளித்த பேட்டியின் பொது கூறியதாவது:- கோவில்பட்டி வித்யபிரகாசம் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு கற்றல் – கற்பித்தல் உபகரணங்களை அவர்களே சுயமாக உருவாக்கியுள்ளார்கள். இப்பள்ளியில் பயின்று […]
கோவில்பட்டியில் உள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் மகாத்மா ஜோதிராவ் பூலே பிறந்த தினத்தை முன்னிட்டு சமூகத்தில் போற்றுதலுக்குரிய தலைவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. பொதுச் செயலாளர் வேலு ராஜா முன்னிலை வகித்தார். கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
கோவில்பட்டி நகர பா.ஜனதா தலைவர் சீனிவாசன் தலைமையில் பொதுச் செயலாளர் விஜயகுமார் முன்னிலையில் நகரச் செயலாளர் ராஜன், பொருளாளர் பாலமுருகன், ஓ பி சி மாவட்ட தலைவர் வெங்கடேசன், ஊடகபிரிவு மாவட்ட தலைவர் அம்மன்மாரிமுத்து ஆகியோர் நகராட்சி ஆணையாளருக்கு ஒரு மனு அளித்தனர். இந்த் மனுவை அவரது மேலாளர் பெருமாள் பெற்றுக்கொண்டார்/ மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தின் நடுப்பகுதியில் காந்தி மண்டபம் உள்ளது. காந்தி மண்டப நிர்வாகத்தினர் பிரதான நுழைவு வாயிலை அடைத்துவிட்டு […]
கோவில்பட்டி ஏ.ஐ.டி.யு.சி.ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று கலை நடைபெற்றது. கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி.ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட தலைவர் பாபு தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் ஐயப்பன், வட்டார தலைவர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சரோஜா, மாவட்ட குழு பரமராஜ், செல்லையா, ஜோசப், ரஞ்சனி கண்ணம்மா,நிர்வாக குழு சேதுராமலிங்கம், நகர குழு சண்முகவேல், ராஜ், விஜயலட்சுமி, செந்தில் ஆறுமுகம் உள்பட […]
ஓ.பன்னீர்செல்வத்தின் திருச்சி மாநாடு: ரூ.200 கோடி கருப்பு பணம் வெளியே வரப்போகிறது-டி.ஜெயக்குமார்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பல்வேறு அதிரடி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இரட்டை தலைமை வேண்டாம் ஒற்றை தலைமையால் கட்சியை வளர்க்க முடியும் என்ற நிலை எடுக்கப்பட்டது. ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து இன்னும் சீரான நிலையை எட்டவில்லை;. எடப்பாடி பழனிசாமி -ஒ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் அவரது […]
கோவில்பட்டி வித்ய பிரகாசம் மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி மற்றும் ஆரம்ப கால பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் 20-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி தொழிற் பயிற்சிக்கான கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் கலந்து கொண்டார். பள்ளி 20-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் தொழிற் பயிற்சிக்கான கண்காட்சியை திறந்து வைத்தார். கண்காட்சியில் இடம் பெற்று இருந்த மாணவர்களின் […]