கோவில்பட்டி பஸ்நிலையத்தில் உள்ள காந்தி மண்டப நுழைவுவாயிலை மூடக்கோரி பா.ஜனதா மனு

கோவில்பட்டி நகர பா.ஜனதா தலைவர் சீனிவாசன் தலைமையில் பொதுச் செயலாளர் விஜயகுமார் முன்னிலையில் நகரச் செயலாளர் ராஜன், பொருளாளர் பாலமுருகன், ஓ பி சி மாவட்ட தலைவர் வெங்கடேசன், ஊடகபிரிவு மாவட்ட தலைவர் அம்மன்மாரிமுத்து ஆகியோர் நகராட்சி ஆணையாளருக்கு ஒரு மனு அளித்தனர். இந்த் மனுவை அவரது மேலாளர் பெருமாள் பெற்றுக்கொண்டார்/
மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தின் நடுப்பகுதியில் காந்தி மண்டபம் உள்ளது. காந்தி மண்டப நிர்வாகத்தினர் பிரதான நுழைவு வாயிலை அடைத்துவிட்டு கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளது.
இதன் காரணமாக பஸ் நிலையத்துக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் பொதுமக்கள் பெரும் சிரமங்ககளை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
காந்தி மண்டபத்தின் பிரதான நுழைவு வாயில், நகராட்சி பஸ் நிலையத்தினுள் அமைந்துள்ளது. இதனால் நெருக்கடி ஏற்பட்டு விபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் தலையிட்டு பஸ் நிலையத்தினுள் இருக்கும் காந்தி மண்டப நுழைவு வாயிலை மூட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
