• June 8, 2025

கோவில்பட்டி மார்க்கெட் வியாபாரிகள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

 கோவில்பட்டி மார்க்கெட் வியாபாரிகள்  வாயில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

கோவில்பட்டி தினசரி மார்க்கெட் கடைகளை இடித்து விட்டு புதிய கடைகள் கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்கி உள்ளது,. இதனால் கூடுதல் பஸ் நிலையத்தில் தற்காலிகமாக மார்க்கெட் செயல்படும் என்றும் அங்கு  வியாபாரிகள் கடைகள் அமைத்து கொள்ளலாம் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

அனால் வியாபாரிகள் கடைகளை காலி செய்ய மறுத்து விட்டனர், மார்க்கெட் கடைகளை இடிக்க கூடாது. அரு ஒதுக்கிய பணத்தில் வேறு இடத்தில் கூடுதல் மார்க்கெட் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடைகளை காலி செய்யமறுத்து வருகிறார்கள்.

அவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் விதித்த கெடு முடிந்தும் வியாபாரிகள் கடைகளை காலி செய்யவில்லை. தொடர்ந்து மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று மார்க்கெட் வியாபாரிகள் வாயில் கருப்பு துணி கட்டி மவுன போராட்டம் நடத்தினார்கள். கடைகளை இடிக்க கூடாது, வேறு இடத்தில் கூடுதல் மார்க்கெட் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற வியாபாரியும் சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளருமான எஸ்.ஆர்,பாஸ்கரன் கூறுகையில், “ இந்த மார்க்கெட் வியாபாரிகளின் வாடகை மூலம் ஆண்டுக்கு ரூ.3 கோடியே 50 லட்சம் நகராட்சிக்கு வருமானம் கிடைக்கிறது. அப்படி இருக்கும் பொது ஏன் இடிக்க வேண்டும். அதிகாரிகள் சுய லாபத்துக்காக செயல்படுகிறார்கள். மக்கள் பிரச்சினையை வியாபாரிகளின் பிரச்சினைகளை பார்ப்பதில்லை” என்றார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *