கோவில்பட்டியில் மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 20-ம் ஆண்டு தொடக்க விழா; ஆட்சியர் பங்கேற்பு

கோவில்பட்டி வித்ய பிரகாசம் மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி மற்றும் ஆரம்ப கால பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் 20-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இதையொட்டி தொழிற் பயிற்சிக்கான கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் கலந்து கொண்டார். பள்ளி 20-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் தொழிற் பயிற்சிக்கான கண்காட்சியை திறந்து வைத்தார். கண்காட்சியில் இடம் பெற்று இருந்த மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார்.
இந்த விழாவில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் .மகாலட்சுமி,கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
