கோவில்பட்டி அருகே , எட்டயபுரத்தை சேர்ந்தவர் அய்யனார்(38). இவர் எட்டயபுரம் பஜாரில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலையில் அவரது கடை உடைக்கப்பட்டு இருந்தது. இது பற்றி அறிந்து அய்யனார் விரைந்து வந்தார்.கடைக்குள் சென்று பார்த்தபோது திருட்டு நடந்து இருப்பதை உறுதி செய்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். எட்டயபுரம் காவல் ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் தனது மனைவி மற்றும் மகன் சுபாஷுடன் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார் இந்நிலையில் தண்டபாணியின் மகன் சுபாஷ் அனுஷா என்ற பெண்ணை காதலித்தார்.. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த தண்டபாணி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.. மேலும் காதலை கைவிடும்படி சுபாஷிடம் கூறி வந்தார்.இந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ், […]
நீதிமன்றங்களில் உங்கள் வழக்குகளுக்கு சமரசம் நாடுவீர்…கோவில்பட்டியில் விழிப்புணர்வு பிரசாரம்
நீதிமன்றங்களில் குற்றங்கள் மற்றும் பொதுமக்கள் தொடரும் வழக்குகள் ஆகியவை நீதிபதி முன்னிலையில் இருதரப்பு வக்கீல்கள் மூலம் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படுகிறது. இது தவிர சமரச மையமும் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நீதிமன்றத்திலும் இந்த சமரச மையம் உள்ளது, பொதுமக்கள் இந்த மையத்தை நாடும்போது வக்கீல்கள் மூலம் இரு தரப்பு பேச்சு நடத்தி சமரசம் செய்து வைக்கப்படுகிறது. இந்த சமரச மையம் பற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவில்பட்டி உதவி அமர்வு மற்றும் சார்பு […]
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில்கொண்டு மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்துக்குக் கடலில் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, கிழக்குக்கடற்கரை எல்லையான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை ஏப்ரல் 15-ந்தேதி(இன்று) முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலும், மேற்குக்கடற்கரை எல்லையான கன்னியாகுமரி முதல் நீரோடி வரை ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரை (61 நாட்கள்) […]
டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட பா,ஜனதா தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் மாலை அணிவித்தார் இந்நிகழ்ச்சியில் பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணன் , மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜ், நகரத் தலைவர் சீனிவாசன், கிழக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி ,நகர பொதுச்செயலாளர் விஜயகுமார், மாவட்ட மாநில ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர், அம்மன் மாரிமுத்து நன்றி கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எஸ்.சி. மற்றும் எஸ்.டி.பிரிவு சார்பில் […]
கோவில்பட்டி அருகே எட்டயபுரம் ஒன்றியம் பா.ஜனதா விவசாய அணி சார்பாக தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொன்னேர்திருவிழா நடத்தப்பட்டது, மேல ஈரால் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் வைத்து விவசாய நிலத்தில் உழுது நடந்தது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா பார்வையாளர் போத்தீஸ் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சரவண கிருஷ்ணன், விவசாய அணி கோட்ட பொறுப்பாளர் சுரேஷ்குமார், விவசாய அணி மாவட்ட தலைவர் மருதையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் […]
அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மேயர் ஜெகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கனிமொழி எம்.பி.யிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று ஊழல் பட்டியல் வெளியிட்டது குறித்து கேள்வி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த கனிமொழி , “சில பேர் அரசியலில் அவர்களது நிலையை தக்க வைத்துக்கொள்ள […]
கோவில்பட்டி அருகே உள்ள நக்கல முத்தன்பட்டியில் இன்று காலை காரும் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இவ்விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இவ்விபத்தில் காரை ஓட்டிவந்த குலசேகரப்பேரி ஒத்தக்கடை தங்கப்பாண்டி மகன் முகேஷ் (வயது 25), மற்றும் காரில் வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் முத்து மகள் பேச்சியம்மாள் (17) ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் இறந்த பேச்சியம்மாள் கல்லூரியில் படித்து வந்தார்.இருவரும் காரில் கோவில்பட்டி இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்றபோது இவ்விபத்து […]
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் தீ சேவை தினம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. 1944 ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி மும்பையில் உள்ள துறைமுகத்தில் வெளிநாட்டு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதில் தீயணைப்பு வீரர்களின் மீட்பு பணியின் போது 66 தீயணைப்பு வீரர்கள் இறந்தனர். தீயணைப்பு வீரர்களின் தியாகத்தினை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதி தீ சேவை தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.கோவில்பட்டியில் இன்று நடந்த தீ சேவை […]
கோவில்பட்டியில் தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தேவர் திருமகன் இளைஞரணி சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது, நிகழ்ச்சிக்கு நிறுவனத்தலைவர் வெயிலுமுத்து பாண்டியன் தலைமை தாங்கினார், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி அன்னதானத்தை தொடங்கிவைத்தார், இதில் ராஜேஷ்,முருகேச பாண்டியன் மற்றும் வீரவாஞ்சிநகர் தேவர் திருமகன் இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.