நீதிமன்றங்களில் உங்கள் வழக்குகளுக்கு சமரசம் நாடுவீர்…கோவில்பட்டியில் விழிப்புணர்வு பிரசாரம்

நீதிமன்றங்களில் குற்றங்கள் மற்றும் பொதுமக்கள் தொடரும் வழக்குகள் ஆகியவை நீதிபதி முன்னிலையில் இருதரப்பு வக்கீல்கள் மூலம் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படுகிறது.
இது தவிர சமரச மையமும் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நீதிமன்றத்திலும் இந்த சமரச மையம் உள்ளது, பொதுமக்கள் இந்த மையத்தை நாடும்போது வக்கீல்கள் மூலம் இரு தரப்பு பேச்சு நடத்தி சமரசம் செய்து வைக்கப்படுகிறது.
இந்த சமரச மையம் பற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவில்பட்டி உதவி அமர்வு மற்றும் சார்பு நீதிமன்ற வளாகத்தில் சமரசம் நாடுவீர்… என்ற முகாம் நடைபெற்றது. அப்போது சமரச மையத்தின் சிறப்புகள் பற்றிய நோட்டீசு விநியோகம் செய்யப்பட்டது.
சப் கோர்ட்டு நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் , துண்டு பிரசுரங்கள் வழங்கி சமரச மையம் பற்றி விளக்கினார். வக்கீல்கள் சந்திரசேகர், விஜயகுமார், பழனிசாமி, சோலையப்பன், சிரஸ்தார் சுப்புலட்சுமி, சட்டக்குழு பணியாளர்கள் மரிக்கொழுந்து, மாரியப்பன், மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்,
சமரசத்துக்கு உகந்த வழக்குகள்:
*தனிநபர் தகராறு
*பண வசூல் தகராறு
*குடும்ப தகராறு
*சொத்து தகராறு
*வாடகை தகராறு
*காசோலை தகராறு
*மின்சார வாரியம்
*தொழிலாளர் நலம்
*உரிமையியல் மற்றும் இதர வழக்குகள்
சமரசத்தின் பயன்கள் :
*உங்கள் வழக்குகளுக்கு சமரச மையத்தின் மூலம் சுமுகமான தீர்வு காணப்பட்டால் முழு நீதிமன்ற கட்டணத்தையும் திரும்ப பெறலாம்.
*உங்கள் பிரசினைகளை நீங்களே விரைவாக கையாண்டு சுமுகமான தீர்வுகளை கட்டணம் ஏதுமின்றி காணமுடியும்.
*சமரச மையத்தில் நடைபெறும் அனைத்து பேச்சுவார்த்தைகளும், எவ்வகையிலும் பதிவு செய்யப்படமாட்டாது. ரகசியம் காக்கப்படும்.
சமரசம் எப்படி?
*அனைத்து நீதிமன்றங்களிலும் சமரச மையங்கள் செயல்படுகின்றன.
*நிலுவையில் உள்ள உங்கள் வழக்குகளை நேரடியாகவோ, வழக்கறிஞர் மூலமாகவோ சமரச மையத்திற்கு அனுப்ப கோரலாம்.
*அனைத்து மையங்களிலும் உள்ள பயிற்சி பெற்ற சமரசர்கள், சமரச பேச்சுவார்த்தைக்கு எதுவாக உங்களை வழிநடத்துவர்
