அம்பேத்கர் சிலைக்கு பா.ஜனதா, காங்கிரஸ் சார்பில் மாலை அணிவிப்பு

டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட பா,ஜனதா தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் மாலை அணிவித்தார் இந்நிகழ்ச்சியில் பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணன் , மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜ், நகரத் தலைவர் சீனிவாசன், கிழக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி ,நகர பொதுச்செயலாளர் விஜயகுமார், மாவட்ட மாநில ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர், அம்மன் மாரிமுத்து நன்றி கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எஸ்.சி. மற்றும் எஸ்.டி.பிரிவு சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தல் நடைபெற்றது எம்.முத்து தலைமை தாங்கினார். அருண்பாண்டி, துறை ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
சிறப்பு விருந்தினராக மாநில துணை தைவர் மாரிமுத்து கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவரை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.,.
