அண்ணாமலையின் ஊழல் புகாருக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை -கனிமொழி எம். பி.

அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மேயர் ஜெகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் கனிமொழி எம்.பி.யிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று ஊழல் பட்டியல் வெளியிட்டது குறித்து கேள்வி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த கனிமொழி , “சில பேர் அரசியலில் அவர்களது நிலையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று தவறான விஷயங்களை பேசி வருகின்றனர். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம்எனக்கு இல்லை” என்று தெரிவித்தார்
