• June 6, 2025

Month: October 2022

கோவில்பட்டி

“நம்ம கோவில்பட்டி” செல்பி ஸ்பாட்

சென்னை கோவை, தூத்துக்குடி போன்ற நகரங்களில் உள்ளது போல கோவில்பட்டியில் ‘நம்ம கோவில்பட்டி” என்ற செல்பி ஸ்பாட் உருவாக்கப்பட்டுள்ளது. இது நகராட்சி சார்பிலோ அல்லது மாவட்ட நிர்வாகம் சார்பிலோ அமைக்கப்படவில்லை. அதுவும் கோவில்பட்டி நகரின் மையபகுதியிலோ அல்லது நகரின் நுழைவு பகுதியிலோ இல்லை. கோவில்பட்டி புறநகர் பகுதியான சுபாநகரில் K.R.A.மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளிக்கூடத்தின் சார்பில்” நம்ம கோவில்பட்டி” செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டு இருக்கிறது, பள்ளிக்கூடத்தின் முன்பகுதியில் நிறுவப்பட்டுள்ள இந்த செல்பி ஸ்பாட்டை கோவில்பட்டி நகர் […]

செய்திகள்

மதுவால் வருமானம், அரசுக்கு அவமானம்- மக்கள் நீதி மய்யம் கண்டனம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொதுசெயலாளர் சு.ஆ.பொன்னுசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- தீபாவளி பண்டிகையையொட்டி நடப்பாண்டில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகள் வாயிலாக சுமார் 708கோடி ரூபாய்க்கு மேல் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வருகின்ற தகவல்கள் தமிழகத்தில் நாளுக்கு நாள் மதுப்பிரியர்கள் எனும் குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதையும், குடியினால் கணக்கிலடங்கா குடும்பங்கள் சீரழிந்து சிதிலமடைந்து போவதையும், தமிழர்களின் பணித்திறன் குறைந்து வடமாநில தொழிலாளர்கள் வருகை அதிகரித்து வேலையில்லா […]

தூத்துக்குடி

பணி நிரந்தரம் கோரி, தூத்துக்குடி அனல் மின்நிலைய ஊழியர்கள் தர்ணா

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லைன்மேன், உதவியாளர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் என ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 18ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல ஆண்டுகளாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனாலும் அவர்களது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணியின் […]

செய்திகள்

தீபாவளி: சிவகாசி பகுதியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுப்பகுதியில் 1,070 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிலில் 3 லட்சம் பேர் நேரடியாகவும், 8 லட்சம் பேர் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு, மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு 70 சதவீதம் அளவுக்கு மட்டுமே பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டன.இதேபோல் 70 சதவீதம் தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்தது. மேலும் இந்த ஆண்டு பட்டாசு விலை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் […]

செய்திகள்

டி.ஜெயக்குமாருக்கு வீரவாள் பரிசு

சென்னை திரு வி.க.நகர் பகுதியில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு விழாக்குழு சார்பில் வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.

செய்திகள்

பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட மீரா மிதுன் எங்கே? கண்டுபிடித்து தருமாறு , தாயார் போலீசில்

மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் சில மாதங்களுக்கு முன்பு பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டார். அது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீரா மிதுன் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.இந்த வழக்கு தொடர்பாக மீரா மிதுனும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். பின்பு இந்த வழக்கு கடந்த 6-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது […]

தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? கனிமொழி

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் அமைச்சர் பி.கீதாஜீவன், ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழு தலைவர் கனிமொழி எம்.பி. ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு மழையின் போதும் பல இடங்களில் மழை நீர் தேங்கி இருந்து பொது மக்களுக்கு மிகப்பெரிய சிரமத்தை […]

கோவில்பட்டி

தீபாவளி ஜோர்: எட்டயபுரம் சந்தையில் ரூ. 7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து குறிப்பாக தேனி, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகள் வாங்குவதும் விற்பதும் வழக்கம்.நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை என்பதால் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் அதிகாலை முதலே கூட்டம் களைகட்டி விற்பனை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதிக அளவிலான ஆடுகள் விற்பனைக்கு வந்தது. ஒவ்வொரு ஆடும் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி நகரில் ரூ.2.84 கோடியில் எல்.இ.டி. மின்விளக்குகள்; நகரசபை கூட்டத்தில் முடிவு

கோவில்பட்டி நகரசபை அவசர கூட்டம் இன்று மதியம் நடந்தது. நகரசபை தலைவர் கா. கருணாநிதி தலைமை தாங்கினார். நகரசபை ஆணையாளர் ராஜாராம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணையின்படி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கும் தலா 4 பேர் கொண்ட குழு அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. நகரிலுள்ள தெருக்களில் எல்.இ.டி. மின்விளக்குகள் அமைத்திட ரூ.2 கோடியே 84 […]

செய்திகள்

தி.மு.க.வில் இருந்து வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நீக்கம்

தி.மு.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் கே.எஸ் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் தனது பதிவில் “மன்மோகன் சிங் 2.0 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாழ்த்துகள்” என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் மன்மோகன் சிங் புகைப்படத்தில் மல்லிக்கார்ஜுன கார்கே தலையை மார்ப் செய்தது போல் புகைப்படத்தையும் இணைத்திருந்தார் இது காங்கிரஸ் கட்சியினரிடையே மட்டுமின்றி தி.மு.க.வினர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், […]