• June 7, 2025

கோவில்பட்டி நகரில் ரூ.2.84 கோடியில் எல்.இ.டி. மின்விளக்குகள்; நகரசபை கூட்டத்தில் முடிவு

 கோவில்பட்டி நகரில் ரூ.2.84 கோடியில் எல்.இ.டி. மின்விளக்குகள்; நகரசபை கூட்டத்தில் முடிவு

கோவில்பட்டி நகரசபை அவசர கூட்டம் இன்று மதியம் நடந்தது. நகரசபை தலைவர் கா. கருணாநிதி தலைமை தாங்கினார். நகரசபை ஆணையாளர் ராஜாராம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணையின்படி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கும் தலா 4 பேர் கொண்ட குழு அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. நகரிலுள்ள தெருக்களில் எல்.இ.டி. மின்விளக்குகள் அமைத்திட ரூ.2 கோடியே 84 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்க மன்ற அனுமதி அளிக்கப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *