• June 6, 2025

Month: October 2022

செய்திகள்

திண்டுக்கல் போக்குவரத்து பணிமனையில் தொ.மு.ச. – சி.ஐ.டி.யு. இடையே மோதல்

திண்டுக்கல் போக்குவரத்து பணிமனை 2 ல் தொ.மு.ச. மற்றும் சி.ஐ.டி.யு.தொழிர்சங்கங்கள் இடையே கருத்து வேறுபாட்டால் வார்த்தை போர் வெடித்துள்ளது.இரு தரப்பினரின் அறிவிப்பு பலகையில் மாறிமாறி எழுதப்பட்டுள்ள வாசகங்களால் சர்ச்சை வெடித்து உள்ள்ளதுதொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் அறிவிப்பு பலகையில், “தொழிலாளர்களை ஏமாற்றி பலா லட்சங்களை வாங்கி சுருட்டும் திண்டுக்கல் கிளை -2 சி.ஐ.டி.யு. சங்க நிர்வாகிகளை வன்மையாக கண்டிக்கிறோம். மாமியார் உடைத்தால் மண் சட்டை மருமகள் உடைத்தால் பொன் சட்டியா?” என்று எழுதப்பட்டிருந்தது. இதே போல் திண்டுக்கல் அரசு […]

செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலி: தூத்துக்குடியை சேர்ந்த 6 பேர் குடும்பத்துக்கு தலா

தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 58). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30), ஈசாக் (39), தெர்மஸ் (19) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை வந்தனர்.பின்னர், மாதாவை தரிசனம் செய்த அவர்கள் இரவில் அங்கேயே தங்கினர். இந்த நிலையில் நேற்று காலை சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தொகுதிக்கு தேவையான 1௦ திட்டங்கள் பட்டியல் ; கலெக்டரிடம் கடம்பூர் ராஜூ

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான முக்கிய 1௦ திட்டங்கள் பற்றி பட்டியல் தரும்படி எம்.எல்/ஏ.க்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து இருந்தார்.அதன்படி ஒவ்வொரு தொகுதி எம்.எல்.ஏ.வும் தனது தொகுதிக்கு தேவையான முக்கிய திட்டங்கள் பட்டியலை ஒப்படைத்து வருகிறார்கள்.அந்த வகையில் கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜை சந்தித்து முக்கியமான 1௦ திட்டங்கள் அடங்கிய பட்டியலை ஒப்படைத்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த திட்டங்கள் விவரம் வருமாறு:- மேற்கண்டவாறு பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

செய்திகள்

ஓசிப்பயணம்: பஸ்களில் செல்லும்போது பெண்கள் அவமானப்படுகிறார்கள்-டி.ஜெயக்குமார் சொல்கிறார்

அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-கேள்வி :- தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். பஸ் பயணத்தை ஓசி பயணம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளாரே..?பதில் :- இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு உன்னதமான திட்டம் தாலிக்குத் தங்கம் திட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்தார். இந்த திட்டத்தை நிறைவேற்றி எல்லோருக்கும் ஒரு சவரன் தங்கத்தை அளித்தார். இந்த திட்டத்திற்கு ரூ. 7 […]

செய்திகள்

4 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை; தமிழகத்தில் 489 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நேற்று புதிதாக 284 ஆண்கள், 205 பெண்கள் என மொத்தம் 489 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 101 பேர், செங்கல்பட்டில் 44 பேர், கோவையில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களை தவிர, அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. மேலும், 12 வயதுக்குட்பட்ட 53 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 66 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பூக்கள் விலை உயர்வு

தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை விழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள், வா்த்தக நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் ஸ்டோர்ஸ், வாகனப் பணிமனை கூடங்கள், லாரி பட்டறைகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.மேலும் ஆயுதபூஜையில் இடம் பெறும் பொரிகடலை, வெல்லம், பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் தொடங்கி உள்ளது. அதுமட்டுமின்றி வீடுகளில் பூஜை செய்வதுடன், வாகனங்களுக்கு மாலை அணிவித்து பூஜைகள் செய்யப்படும். இதனால் பூஜை பொருட்கள் வாங்குவதற்கும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஆயுதபூஜையையொட்டி […]

செய்திகள்

இலவச பஸ் பயணத்தை பெண்கள் புறக்கணிக்க வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க. பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-ஆம்னி பஸ் முதலாளிகளுக்கு பண்டிகை காலத்தில்தான் வருமானம் கிடைக்கும். வசதியானவர்கள், ஆம்னி பஸ்சில் செல்லலாம். ஏழை மக்கள் அரசு பஸ்சில் பயணிக்கலாம் என்று அமைச்சர் சொல்கிறார்.இதை சொல்வதற்கு எதற்கு அமைச்சர் என்று தெரியவில்லை. ஒரு முறை பயணிப்பதற்கு ரூ.4 ஆயிரம் என்றால், அதன் பிறகு ஊருக்கு சென்று பண்டிகை கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை. சாதாரண நாட்களில் இருக்கும் கட்டணத்தை விட பண்டிகை காலங்களில் கட்டணத்தை உயர்த்துகிறார்கள். எல்லாமே […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில், இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாவட்ட மாநாடு

இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட 5வது மாநாடு கோவில்பட்டி பைரவா மஹாலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட நிர்வாகிகள் சுப்பராஜ், நம் சீனிவாசன் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில குழு உறுப்பினர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் வரவேற்று பேசினார்.சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு அண்ணல் காந்தியடிகள், கர்மவீரர் காமராஜர் திருவுருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாரஇந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் தமிழரசன் மாநாட்டு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் `டூரோகார்டு- ஸ்டீல் டோர்’ ஷோரூம் திறப்பு விழா

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் டூரோகார்டு நிறுவனத்தின் ஸ்டீல் டோர் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் , கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜு கலந்து கண்டு ஷோரூமை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.இந்நிகழ்ச்சியில் அருண்குமார், கோவில்பட்டி ஆவின் தலைவர் தாமோதரன், நகர் மன்ற உறுப்பினர் கவியரசன், மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் சுதா (எ) சுப்புலட்சுமி, மாவட்ட மானவரணி துணை தலைவர் செல்வக்குமார், நகர அம்மா பேரவை செயலாளர் […]

செய்திகள்

ஊழியர்கள் போராட்டம்: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் செல்லும் வாகனங்கள்

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனங்கள் ஆள் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.இதன் காரணமாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்களாக பணியாற்றி வந்த 26 பேர் பணி ஒப்பந்தம் முடிந்து விட்டதாக கூறி, பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தங்களை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி கடந்த 2 நாட்களாக, சுங்கச்சாவடியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களுக்கு ஆதரவாக மற்ற ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து வாகனங்களும், […]