• June 7, 2025

4 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை; தமிழகத்தில் 489 பேருக்கு கொரோனா

 4 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை; தமிழகத்தில் 489 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் நேற்று புதிதாக 284 ஆண்கள், 205 பெண்கள் என மொத்தம் 489 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 101 பேர், செங்கல்பட்டில் 44 பேர், கோவையில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களை தவிர, அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. மேலும், 12 வயதுக்குட்பட்ட 53 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 66 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் 391 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 5 ஆயிரத்து 415 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 352 பேரும், செங்கல்பட்டில் 399 பேரும், கோவையில் 338 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர். மேற்கண்ட தகவல்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *