• June 7, 2025

திண்டுக்கல் போக்குவரத்து பணிமனையில் தொ.மு.ச. – சி.ஐ.டி.யு. இடையே மோதல்

 திண்டுக்கல் போக்குவரத்து பணிமனையில் தொ.மு.ச. – சி.ஐ.டி.யு. இடையே மோதல்

திண்டுக்கல் போக்குவரத்து பணிமனை 2 ல் தொ.மு.ச. மற்றும் சி.ஐ.டி.யு.தொழிர்சங்கங்கள் இடையே கருத்து வேறுபாட்டால் வார்த்தை போர் வெடித்துள்ளது.
இரு தரப்பினரின் அறிவிப்பு பலகையில் மாறிமாறி எழுதப்பட்டுள்ள வாசகங்களால் சர்ச்சை வெடித்து உள்ள்ளது
தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் அறிவிப்பு பலகையில், “தொழிலாளர்களை ஏமாற்றி பலா லட்சங்களை வாங்கி சுருட்டும் திண்டுக்கல் கிளை -2 சி.ஐ.டி.யு. சங்க நிர்வாகிகளை வன்மையாக கண்டிக்கிறோம். மாமியார் உடைத்தால் மண் சட்டை மருமகள் உடைத்தால் பொன் சட்டியா?” என்று எழுதப்பட்டிருந்தது.


இதே போல் திண்டுக்கல் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு. பெயர் பலகையில் எழுதப்பட்டு இருந்ததாவது:-
ஆளும் கட்சி தொழிற்சங்க அராஜகம்
வண்டி Dr, Cr போஸ்டிங்குக்கு 10,000, 5,000 லஞ்சம் வாங்கிகொண்டு வண்டி ஆளை மாற்றுவது காசுக்காக வண்டி போஸ்டிங்கிற்கு யார் அதிகாரம் கொடுத்தது?
இதற்கு அதிகாரிகள் உடந்தையா? தமிழக போக்குவரத்து துறை மந்திரி இதன் மீது நடவடிக்கை எட்ப்பாரா? மந்திரி யாருக்கும் OD இல்லை என்கிறார். திண்டுக்கல் 2 கிளையில் மட்டும் OD கொடுக்க யார் அதிகாரம் கொடுத்தது?
இவ்வாறு சி.ஐ.டி.யு. கூறி உள்ளது.
கூட்டணி கட்சிகளின் தொழிற்சங்கங்கள் இடையே ஏற்பட்டுள்ள இந்த சர்ச்சையானது மோதலை ஏற்படுத்தி இருக்கிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *