தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி பொது மக்களிடமிருந்து 366 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.மேலும், ஊரக வளர்ச்சித்துறையில் சாத்தான்குளம் […]
கோவில்பட்டி பயணியர் விடுதி வாசலில் உடைந்து கிடக்கும் விவசாயிகள் போராட்ட தியாகியின் நினைவு
கோவில்பட்டி அருகே, பழைய அப்பனேரி கிராமத்தை சேர்ந்த கந்தசாமி நாயக்கர் 5-7-1972இல் கோவில்பட்டியில் நடந்த விவசாயிகள் சங்க போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது பெயரில் படிப்பகம் ஒன்றினை அவருடைய சொந்த கிராமமான பழைய அப்பனேரியில் நிறுவ பெருந்தலைவர் காமராஜர் நேரில் வந்து 45 ஆண்டுகளுக்கு முன்னர் அடிக்கல் நாட்டியதை யாரும் பொருட்படுத்த வில்லை. அன்றைய இந்திரா காந்தி அமைச்சரவையில் இருந்த மத்திய மந்திரி மோகன் குமாரமங்கலமும் நேரடியாக ஆறுதல் தெரிவிக்க பழைய அப்பனேரிக்கு வந்திருந்தார். கோவில்பட்டி அண்ணா […]
மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் தி.மு.க. துணை பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் குடும்பத்துடன் சுப்புலட்சுமி ஜெகதீசன் வசித்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது இவரை எதிர்த்து பா.ஜ.கவை சேர்ந்த சரஸ்வதி போட்டியிட்டார். இதில் 206 ஓட்டு வித்தியாசத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்வி அடைந்தார்.சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது தோல்விக்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கட்சி பிரமுகர் ஒருவர் மற்றும் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட 2 […]
கோவில்பட்டி அரசு வட்டார நூலகத்தில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவின் சார்பாக பருவகால நோய்களும் தடுப்பு முறைகளும் பற்றி விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.முகாமிற்கு நூலக புரவலர் வினோபா தலைமை தாங்கினார்.நூலக பணியாளர் கலையரசி வரவேற்று பேசினார். சித்த மருத்துவர் டாக்டர். அபிநயா நோய் தடுப்பு முறைகள் குறித்து சிறப்புரையாற்றினார். அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை நூலகர் அழகர்சாமி செய்திருந்தார்
தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம், பொதுவிழாவில் ஈடுபட்டு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, அவரை பாராட்டும் வகையில் பொதுவாழ்வில் பொன்விழா தூத்துக்குடியில் நடத்தப்பட்டது.தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ (தெற்கு), முரளிதரன் (மாநகரம்), காமராஜ் (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகேந்திரன் வரவேற்று பேசினார். ஐ.என்.டி.யு.சி. செயற்குழு உறுப்பினர் ராஜ் நோக்க உரையாற்றினார்.அமைச்சர் கீதாஜீவன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சிறுபான்மையினர் […]
கோவில்பட்டி அருகே காட்டுராமன்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ்(வயது 53) பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவருடைய இளைய மகன் முத்துக்குமார் (26), சரியாக வேலைக்குச் செல்லாமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றி வந்தாராம். மேலும் மது அருந்தி விட்டுஅடிக்கடி வீட்டிற்கு வந்து தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கம் போல மது அருந்தி விட்டு வந்த முத்துக்குமார், தந்தையிடம் மது அருந்த பணம் வேண்டும் என்று கேட்டு […]
கோவில்பட்டியில் இன்று காலை நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தது. மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று காலை 8 மணியில் மாலை 5 மணி வரை கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 8 துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார தடை செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் மாலை 3. மணிக்கு மேல் கருமேகம் திரண்டு வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சி அளித்தது. 3.15 மணி அளவில் கன மழை பெய்யத்தொடங்கியது.மழையின்போது பலத்த காற்றுடன் எழுந்த இடிச்சத்தம் மக்களை பயமுறுத்தியது. மேலும் மின்னல் […]
கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக கே.1 ரக மிளகாய் விதைகள் மற்றும் செங்காம்பு கருவேப்பிலை நாற்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கோழிக்கோடு பாக்கு மற்றும் நறுமண பயிர்கள் மேம்பாட்டு இயக்குனரக ஒருங்கிணைந்த தேசிய தோட்டக்கலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பாரம்பரிய மற்றும் அதிக காரமுள்ள மிளகாய் ரகமான கோவில்பட்டி1-ஐ பரவலாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க செங்காம்பு கருவேப்பிலை பயிரிடுவதன் மூலம், தினசரி வருமானம் பெறவும் முயற்சி மேற்கொள்ளும் நோக்கத்துடன் ,இந்த நிகழ்ச்சி நடந்தது.வேளாண்மை ஆராய்ச்சி நிலைய […]
ஒடிசாவை சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், 1,213 மண்பாண்ட தேநீர் கோப்பைகளை கொண்டு பிரதமர் மோடியின் மணல் சிற்பத்தை உருவாக்கினார். பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரதமர் மோடியின் 5 அடி உயர மணல் சிற்பத்தை உருவாக்கினார்.இதற்காக 5 டன் அளவு மணல் பயன்படுத்தப்பட்டு இந்த மாபெரும் மணல் சிற்பம் கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ளது.அதில் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோடி ஜி’ என்ற வாசகத்தை எழுதியுள்ளார்.இது பற்றி சுதர்சன் […]
தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த போலீஸ்காரர் ராஜாமார்ஷல் என்பவர் கடந்த 27.6.2022 அன்று சாலை விபத்தில் மரணமடைந்தார்.இதைதொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு அவருடன் 2008ம் ஆண்டு பணியில் சேர்ந்து அவருடன் பணிபுரிந்து வருகின்ற தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல்துறையினரும் சேர்ந்து ரூபாய் 17,35,000/- நிதி திரட்டி ராஜாமார்ஷல் மகன் மற்றும் மகள் ஆகியோருக்கு ரூபாய் 16 லட்த்திற்க்கு எல்.ஐ.சி வைப்பு நிதியாகவும், அவரது தந்தை லெட்சுமணன் மற்றும் தாயார் சமுத்திரகனி ஆகியோருக்கு ரூ. […]