கோவில்பட்டி பயணியர் விடுதி வாசலில் உடைந்து கிடக்கும் விவசாயிகள் போராட்ட தியாகியின் நினைவு தூண்

கோவில்பட்டி அருகே, பழைய அப்பனேரி கிராமத்தை சேர்ந்த கந்தசாமி நாயக்கர் 5-7-1972இல் கோவில்பட்டியில் நடந்த விவசாயிகள் சங்க போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது பெயரில் படிப்பகம் ஒன்றினை அவருடைய சொந்த கிராமமான பழைய அப்பனேரியில் நிறுவ பெருந்தலைவர் காமராஜர் நேரில் வந்து 45 ஆண்டுகளுக்கு முன்னர் அடிக்கல் நாட்டியதை யாரும் பொருட்படுத்த வில்லை. அன்றைய இந்திரா காந்தி அமைச்சரவையில் இருந்த மத்திய மந்திரி மோகன் குமாரமங்கலமும் நேரடியாக ஆறுதல் தெரிவிக்க பழைய அப்பனேரிக்கு வந்திருந்தார்.

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் எதிர்புறம் அமைந்துள்ள அரசு பயணியர் விடுதி வாயில் அருகே தியாகி கந்தசாமி நாயக்கருக்கு கல்வெட்டுடன் கூடிய நினைவு தூண் அமைக்கப்பட்டது, நாளடைவில் பராமரிப்பு இன்று அந்த நினைவு தூண் சாய்ந்து விழுந்து விட்டது. தற்போது கோவில்பட்டி பயணியர் விடுதி வாயில் அருகே உடைந்து போன நிலையில் நினைவு தூண்ட கேட்பாரற்று கிடக்கிறது. அதனை கைப்பற்றி சரியான முறையில் நிலை நிறுத்தி வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு அரசின் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த தியாகியின் நினைவை போற்றும் வகையில் செய்திட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
