• June 6, 2025

Month: September 2022

கோவில்பட்டி

சாலை அமைக்கும் பணிக்கு கரிசல் மண் பயன்படுத்துவதா? விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா குமாரரெட்டியாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வெயிலுகந்தபுரம் முதல் கழுகுமலை வரை உள்ள வண்டிபாதையை 3 அடி உயர்த்தும் பணி நடக்கிறது. வண்டிப்பாதையின் இரு புறமும் உள்ள பகுதியில் இருந்து சுமார் 4 அடி முதல் 6 அடி வரை மண் எடுத்து, வண்டி பாதையை 2 அடி முதல் 3 அடி வரை கரிசல் மண் போட்டு உயர்த்தி உள்ளார்கள்.இது இரண்டு மழைக்கு கூட தாங்காது. இந்த லேயரை செம்மண் கொண்டும் சரளை […]

செய்திகள்

ஒற்றைத் தலைமை என்ற அ.தி.மு.க.வின் நோக்கம் ஏற்பு- எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு இன்று உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை கூறியதாவது:-அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கியுள்ளது.இதன்படி, ஒற்றைத் தலைமை என்ற அ.தி.மு.க.வின் நோக்கம், உள்ளிட்ட முன்னெடுப்புகள் நீதிமன்றத்தால், ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இதுதான் தொண்டர்களின் விருப்பம், சட்டப்படி […]

செய்திகள்

அ.தி.மு.க.பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பு ரத்து; எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக

.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் […]

செய்திகள்

மகளிருக்கான உரிமைத்தொகை மாதம் ரூ 1000 விரைவில் வழங்கப்படும்- மு.க.ஸ்டாலின்

கோவை கொடிசியா வளாகத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்கள் ஸ்ரீநிதி – கவுசிக் தேவ் ஆகியோருக்கு மாலை எடுத்து கொடுத்து திருமணம் நடத்தி வைத்து வாழ்த்தினார்.பின்னர் திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-மணமக்களை வாழ்த்த வாய்ப்பு கிடைத்தற்க்கு நன்றி. கலைஞர் இருந்திருந்தால் இந்த திருமணத்தைக் தலைமையேற்றி நடத்தி வைத்திருப்பார். இந்த மாவட்டத்தை கம்பீரமாக மாற்றிய பெருமை பொங்கலூர் பழனிச்சாமிக்கு உண்டு. சட்டமன்ற உறுப்பினர் […]

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவராக அருள் முருகன் தேர்வு

முருகபெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருசெந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் திகழ்கிறது. உலக புகழ் பெற்ற இந்த கோவிலுக்கு 5 பேரை அறங்காவலர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது..மாப்பிள்ளையூரணி, இந்திரா நகரைச் சேர்ந்த வி.செந்தில் முருகன், திருச்செந்தூர் மானாடு தண்டுபத்து, மேற்கு தெருவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான கே.பி.கே.குமரன் மனைவி அனிதா குமரன், வடக்கு ஆத்தூர் கீழமுத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமதாஸ், சென்னை சாந்தோம், சல்லிவன் தெருவை சேர்ந்த இரா.அருள் முருகன், தூத்துக்குடி போல்பேட்டையை […]

செய்திகள்

சீனாவில் இருந்து இந்திய தேசிய கொடிகள் இறக்குமதி செய்தது வேதனைக்குரியது- சபாநாயகர் அப்பாவு

கனடாவில் ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது சபாநாயகர்களுக்கான காமன்வெல்த் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின், மாநிலங்களின் சபாநாயகர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் மாநில சபாநாயகர்கள் கலந்துகொண்டனர்.காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற வளாகத்திற்கு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் சபாநாயகர்கள் தங்களது கைகளில் தேசியக் கொடி ஏந்திய வண்ணம் பேரணியாக வந்தனர். அந்த தேசியக்கொடிகளில் ‘மேட் இன் சைனா’ என எழுதப்பட்டிருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் நேற்று 1௦7 மி.மீ.மழை

கோவில்பட்டியில் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன்பிறகு மழை தூறிக்கொண்டே இருந்தது. மாலை 6 மணிக்கு மேல் திடீரென கன மழை கொட்டியது.நகரில் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாய் காட்சி அளித்தது. வாகனனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.நேற்று ஒரு நாளில் மட்டும் கோவில்பட்டியில் 1௦7 மி.மீ.மழை அளவு பதிவாகி இருந்தது. கழுகுமலையில் 17, காடல்குடியில் 16, ஸ்ரீவைகுண்டத்தில் 14.1, ஓட்டப்பிடாரத்தில் 2 மி.மீ. மழையும் பதிவாகி இருந்தது. தூத்துக்குடி […]

செய்திகள்

20 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.இந்நிலையில், செப்டம்பர் 1-ந் தேதி (இன்று) முதல் மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், நேற்று நள்ளிரவு முதல் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில், இதுவரை கார், ஜீப், வேன் ஆகியவற்றுக்கு ரூ.90 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, ரூ.10 உயர்த்தப்பட்டு […]

செய்திகள்

தமிழகத்தில் 4-ம் தேதி வரை கனமழை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில், இன்று முற்பகல் வரையும்; நீலகிரி, கோவையில், நாளை முற்பகல் வரையிலும் மிக கனமழை பெய்யும். சென்னையில் இன்று சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், திருச்சி, பெரம்பலுார், விருதுநகர், மதுரை, துாத்துக்குடி திருவாரூர் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும்.இன்று முதல் வரும் 4-ம் […]

கோவில்பட்டி

போலி மதிப்பெண் சான்றிதழ்: அரசு பள்ளி ஆசிரியை பணிநீக்கம்

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராஜாத்தி(வயது 45).கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் சின்னதாராபுரத்தில் உள்ள ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் 1994 -1996 ம் ஆண்டு ஆசிரியா் பயிற்சி படித்த இவா் ஆங்கில பாடத்தில் 37 மதிப்பெண் பெற்றிருந்தாராம். இதனை திருத்தி, 77 மதிப்பெண் பெற்றது போல போலி மதிப்பெண் சான்றிதழ், பட்டயச் சான்றிதழ் கொடுத்து 2002ம் ஆண்டு ஆண்டு விருதுநகா் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் […]