விளைபொருட்களை, நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வகையில் கருணாநிதி முதல் அமைச்சராக இருந்த போது 1999-2000 ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் 103 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன.பின்னர் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இத்திட்டத்தில் தோய்வு ஏற்பட்டபோதிலும், மீண்டும் தி.மு.க. ஆட்சி ஏற்பட்டபோது மேலும் பல இடங்களில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன. தற்சமயம் தமிழகம் முழுவதும் 179 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றனஇடைத் தரகர்கள் இன்றி விவசாயிகளே தங்கள் உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக சந்தையில் விற்பனை செய்யலாம். […]
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயன்ட் மூவீஸ் என்னும் நிறுவனம் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறது.ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த வக்கீல் மைக்கேல் பாரதி, அவரது ஜூனியர் வக்கீல் மோனிகா ஆகிய இருவரும் சேலம் கோர்ட்டில் ஒரு வழக்கிற்காக சென்று விட்டு சாத்தூர் திரும்பினர். காரை டிரைவர் அசோக் குமார் ஓட்டி வந்தார்.திண்டுக்கல் கொடைரோடு மெட்டூர் பாலம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது நிலைதடுமாறி சாலையின் சென்டர் மீடியனில் மோதி எதிர்ப்புறம் சாலையில் ஓடி உருண்டது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ஜூனியர் வக்கீல் […]
கோவில்பட்டி நடராஜபுரத்தில் அரசு மின் மயானம் உள்ளது. அதற்கு அருகில் யோகீஸ்வரர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட நந்தவனம் அமைக்கப்பட்டு உள்ளது.இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது, இதையொட்டி காலையில் கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி யோகீஸ்வரர் சமுதாய தலைவர் கே.டி.ஆனந்த் தலைமை தாங்கினார். செயலாளர் வெயிலுமுத்து வரவேற்றார். பொருளாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். அகில இந்திய சிவகுலத்தார் சமுதாய தலைவர் டி.வி. சேகர், யோகீஸ்வரர் சமுதாய பேரவை மாநில தலைவர் எஸ்.ராஜகோபால் […]
திருநெல்வேலி – பாலக்காடு இடையே பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இன்று காலை 4.50 மணிக்கு திருநெல்வேலி வந்தடைந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் சுமார் 5.15 மணி அளவில் பராமரிப்பு பணிக்காக ‘பிட்லைனுக்கு’ புறப்பட்டது.இதற்காக தச்சநல்லூர் வரை சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலின் என்ஜின் மட்டும் கழற்றப்பட்டு, ரெயிலின் பின்புறம் பொருத்தப்பட்டது. அதன்பின்னர் பிட்லைனை நோக்கி ரெயில் சென்றது. அதிகாலை 5.30 மணி அளவில் பிட்லைனில் நுழைந்த பாலக்காடு ரேயிலின் கடைசி […]
கோவில்பட்டி லெட்சுமி மில் மேலக்காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 61). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மகள் கோவையில் படித்து வருகிறார். தனது குடும்பத்துடன் கோவையில் படிக்கும் மகளை பார்க்க சென்று விட்டு நேற்று நள்ளிரவு சந்திரசேகர் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின் பக்க கதவு திறந்து கிடந்தது. அவர் உள்ளே சென்ற போது பீரோ மற்றும் அலமாரி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பீரோவில் இருந்த ரூ. 10 ஆயிரம் மற்றும் விலை […]
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி, நீட் தேர்வில் கடந்த 2021-ம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 8,061 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியதில் 1,957 பேர் தேர்ச்சி அடைந்தனர். இந்த ஆண்டு (2022) 17,972 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில் 12,840 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். இதில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இது 35 சதவீத தேர்ச்சியாகுமசென்னையில் தேர்வு […]
கோவில்பட்டி பஸ் நிலையத்துக்குள் பெர்மிட் இல்லாமல் வந்து செல்லும் மினி பஸ்கள்; கலெக்டருக்கு
கோவில்பட்டி பஸ் நிலையத்துக்குள் பெர்மிட் இல்லாமல் மினி பஸ்கள் வந்து செல்வதாக கலெக்டருக்கு புகார் மனு அனுப்பபட்டு உள்ளது.தமிழ் பேரரசு கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மா.வேல்முருகன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜூக்கு அனுப்பி இருக்கும் கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:கோவில்பட்டியில் அதிகளவு மினி பஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. எந்த மினி பஸ்களும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் செல்வதில்லை, மாற்றாக சட்டவிரோதமாக மாற்று வழித்தடங்களில் சென்று வருகின்றனர். இதனால் பொது மக்களுக்கு பயன்படாத வண்ணம் உள்ளது.இதுபோல் மினி பஸ் டிரைவர்களுக்கும் […]
கோவில்பட்டி அருகே உள்ள பிள்ளையார் நத்தம், நடுத்தெருவில் குடியிருப்பவர் கந்தவேல் (வயது 52). விவசாயி. இவர் தன்னுடைய நிலத்தில் டிராக்டர் வைத்து உழவு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து நிலத்தை சேர்ந்த கெங்காராஜ் (44) என்பவர் என்னுடைய நிலத்தில் எப்படி உழுதாய்? என்று கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.மாலையில் கந்தவேல் வீட்டுக்கு திரும்பி வரும்போது, கெங்காராஜ் உள்பட சிலர் சேர்ந்து அவரை கம்பால் தாக்கியதாகவும், தடுக்க வந்த மனைவி ரெங்கநாயகியையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் […]
கோவில்பட்டி அருகே தெற்கு ஆரைக்குளம் கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் சுற்றித் திரிவதாக பசுவந்தனை போலீசுக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று அந்தப் பெண்ணை மீட்டு முடுக்குமீண்டான்பட்டியில் உள்ள பெண்கள் மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில், அந்தப் பெண் ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடியை சேர்ந்த லட்சுமணன் மனைவி கலையரசி (வயது 40) என்பது தெரியவந்தது. இவருக்கு நிதிஷ்குமார் (11) என்ற மகன் உள்ளான். மனநிலை பாதிக்கப்பட்ட […]