கார் விபத்தில் பெண் வக்கீல், டிரைவர் பலி


விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த வக்கீல் மைக்கேல் பாரதி, அவரது ஜூனியர் வக்கீல் மோனிகா ஆகிய இருவரும் சேலம் கோர்ட்டில் ஒரு வழக்கிற்காக சென்று விட்டு சாத்தூர் திரும்பினர். காரை டிரைவர் அசோக் குமார் ஓட்டி வந்தார்.
திண்டுக்கல் கொடைரோடு மெட்டூர் பாலம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது நிலைதடுமாறி சாலையின் சென்டர் மீடியனில் மோதி எதிர்ப்புறம் சாலையில் ஓடி உருண்டது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ஜூனியர் வக்கீல் மோனிகா சம்பவ இடத்திலேயே இறந்து போனார். கார் டிரைவர் அசோக் குமார் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனார்.
வக்கீல் மைக்கேல் பாரதி பலத்த காயத்துடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பாக அம்மைநாயக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
