கோவில்பட்டியில் யோகீஸ்வரர் சமுதாயத்திற்கான நந்தவனம் திறப்பு

கோவில்பட்டி நடராஜபுரத்தில் அரசு மின் மயானம் உள்ளது. அதற்கு அருகில் யோகீஸ்வரர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட நந்தவனம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது, இதையொட்டி காலையில் கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி யோகீஸ்வரர் சமுதாய தலைவர் கே.டி.ஆனந்த் தலைமை தாங்கினார். செயலாளர் வெயிலுமுத்து வரவேற்றார். பொருளாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

அகில இந்திய சிவகுலத்தார் சமுதாய தலைவர் டி.வி. சேகர், யோகீஸ்வரர் சமுதாய பேரவை மாநில தலைவர் எஸ்.ராஜகோபால் ஆகியோர் நந்தவனத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.
அமரர் ஊர்தி, பிரீசர் பாக்ஸ் ஆகியவற்றை மாநிலச் செயலாளர் செல்வா கேசவன் பொருளாளர் மு க மாரிமுத்து ஆகியோர் இயக்கி வைத்தனர். பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் அம்மன் மாரிமுத்து மற்றும் ஸ்ரீதர், செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
யோகீஸ்வரர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இந்த நந்தவனம் மற்றும் வாகனம் ப்ரீசர் பாக்ஸ் ஆகியவவற்றை சமுதாய தலைவர்கள் முயற்சி செய்து ஏற்பாடு செய்துள்ளார்கள். மற்ற சமுதாயம் மக்களும் தேவைப்பட்டால் அதற்கான கட்டணம் செலுத்தி பயன்படுத்தி கொள்ளலாம் என்று கோவில்பட்டி யோகீஸ்வரர் சமுதாய தலைவர் கே.டி.ஆனந்த் தெரிவித்து உள்ளார்.
