கோவில்பட்டி பஸ் நிலையத்துக்குள் பெர்மிட் இல்லாமல் வந்து செல்லும் மினி பஸ்கள்; கலெக்டருக்கு புகார் மனு

கோவில்பட்டி பஸ் நிலையத்துக்குள் பெர்மிட் இல்லாமல் மினி பஸ்கள் வந்து செல்வதாக கலெக்டருக்கு புகார் மனு அனுப்பபட்டு உள்ளது.
தமிழ் பேரரசு கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மா.வேல்முருகன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜூக்கு அனுப்பி இருக்கும் கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:
கோவில்பட்டியில் அதிகளவு மினி பஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. எந்த மினி பஸ்களும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் செல்வதில்லை, மாற்றாக சட்டவிரோதமாக மாற்று வழித்தடங்களில் சென்று வருகின்றனர். இதனால் பொது மக்களுக்கு பயன்படாத வண்ணம் உள்ளது.
இதுபோல் மினி பஸ் டிரைவர்களுக்கும் பெரிய பஸ் டிரைவர் களுக்கும் இடையே சண்டை மோதல்கள் ஏற்பட்டு சட்டம் ஓழுங்கு பாதிக்கப்படும் நிலை உள்ளது.
ஆகவே மினி பஸ்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்க அறிவுறுத்துமாறு தவறும் பட்சத்தில் அந்த பஸ்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக கோவில்பட்டி பழைய பஸ் நிலையத்திற்குள் பெர்மிட் இல்லாமல் மினி பஸ்கள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசள் ஈடுபடுவதுடன், பொதுமக்களுக்கு மிகுந்த மன உளைச்சலும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
எனவே பஸ் நிலையத்துக்குள் நிலையம் பெர்மிட் இல்லாத மினி பஸ்கள் வரக்கூடாது என்ற அறிவுறுத்துமாறும், அதற்கு மேல் விதியை மீறும் மினி பஸ்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
