• June 8, 2025

Month: July 2022

கோவில்பட்டி

பள்ளி மாணவிகளுக்கான பேச்சுபோட்டி

கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டுபள்ளி மாணவிகளுக்கான பேச்சு போட்டி நடத்தப்பட்டது.மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து கணேஷ் தலைமை தாங்கினார். பின்னர் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது, பேச்சுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு நோட்டு, பேனா பரிசுகள் வழங்கப்பட்டது,நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சி நகர தொண்டரணி செயலாளர் சங்கர், நகர மகளிர் அணி செயலாளர் ரதி தேவி ,கம்பன் கழக ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

ஜாதி உணர்வை தூண்டக்கூடிய பொருட்கள் விற்கவேண்டாம்; வணிகர்கள் நடவடிக்கைக்கு காவல் கண்காணிப்பாளர் நன்றி

தூத்துக்குடி மாவட்டத்தை குற்றங்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்.மேலும் ஜாதிய பதற்றங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குள் ஊடுருவி, அதன் மூலம் கொடிய மோதல்கள் உருவாகுவதற்கு முக்கிய காரணியாக ஜாதி நூல், ஸ்டிக்கர், டி-சர்ட் போன்றவை அமைந்துள்ளது. தற்போது குழந்தைகளுக்கும், அவர்கள் வளரும் காலத்திலேயே ஜாதிய அடையாளத்தை வலியுறுத்தும் சக்தியாக அவைகள் இருப்பதை சமீபத்திய நிகழ்வுகள் மூலம் உணர்ந்து, அவற்றை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு ‘மாற்றத்தை தேடி” […]

செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் கடிதம் பரிசீலனையில் உள்ளது; சபாநாயகர் அப்பாவு பேட்டி

அ.தி.மு.க. பொதுக்குழு சமீபத்தில் கூடி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கப்பட்டனர்.ஆனால் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்தநிலையில் அ.தி.மு.க. சட்டமன்ற குழுவை மாற்றியமைக்கும்படி எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து கோரிக்கை வந்தால், அதை நிராகரிக்க வேண்டும் என்றும், பொதுக்குழு சம்பந்தமாக கோர்ட்டிலும், இந்திய தேர்தல் கமிஷனிடமும் வழக்குகள் […]

செய்திகள்

சிறையில் உள்ள மகளுக்கு கஞ்சா கொண்டு சென்ற தாய் கைது

திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த சுசீலாமேரி, திண்டுக்கல் நகர் தெற்கு போலீசாரால் கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை பார்க்க வந்த தாய் பாத்திமா மேரியை, சிறை காவலர்கள் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 120 கிராம் எடை மதிப்புள்ள 17 பொட்டலங்கள் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கஞ்சா அவரது மகளுக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது,இதனையடுத்துபாத்திமாமேரி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கரிமேடு காவல் நிலையத்தில் சிறைத்துறையினர் […]

செய்திகள்

கொரோனா பாதிப்பு: மு.க.ஸ்டாலின், மருத்துவமனையில் அனுமதி

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கொரோனா அறிகுறி காரணமாக பரிசோதனை செய்து கொண்டார். இதில் கொரோன உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திகொண்டார்.இது பற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அத்துடன் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று கேட்டுகொண்டிருந்தார்இந்த நிலையில் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார்.இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ,” தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், […]

செய்திகள்

அ.தி.மு.க.அமைப்பு செயலாளர் ஆனார் கடம்பூர் ராஜூ; கூடுதல் நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்

அ.தி.மு.க.இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-கழக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி.பொன்னையன், நத்தம் இரா.விசுவநாதன் , எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.அ.தி.மு.க. கூடுதல் தலைமைக்கழக செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.துணை பொதுசெயலாளர்கள்- கே.பி.முனுசாமி, நத்தம் இரா.விசுவநாதன்.அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர்- சி.பொன்னையன்.கழக தலைமைநிலைய செயலாளர்- எஸ்.பி.வேலுமணிஅமைப்பு செயலாளர்கள்- செல்லூர் கே.ராஜூ, சி.வி.சண்முகம், ப.தனபால், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் சி,ராஜூ . […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே 126 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கோவில்பட்டி அருகே எட்டயபுரம் வட்டம் மேலக்கரந்தை சமுதாய நலக்கூடத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டயர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார். மக்கள் தொடர்பு முகாமில் 126 பயனாளிகளுக்கு ரூ.40.33 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினர். அவர் பேசுகையில் கூறியதாவது:-மக்கள் தொடர்பு முகாம் திட்டம் என்பது மாவட்டத்தின் ஒருகுறிப்பிட்டகிராமத்தில், அதாவது வட்ட தலைமையிடத்தில் இருந்து மிகவும் தொலைவில் உள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கி இத்திட்டம் […]

தூத்துக்குடி

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 இலவச மாதிரி தேர்வு; தூத்துக்குடியில் 17-ம் தேதி நடக்கிறது

தூத்துக்குடி நூலகத்தில் 17-ம் தேதி நடக்கிறது டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு! தூத்துக்குடி நூலகத்தில் 17-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட மைய நூலகர் ராம்சங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு வருகிற 17-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள், 94880 71114, 99523 […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் முககவசம் அணிவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களிள் முக கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் முக கவசம் அணிவதில் அலட்சியம் காட்டி வருகிறார்கள். போலீசார் அபராதம் விதிக்கிறார்கள என்றால் முக கவசம் அணியலாம் என்ற மனநிலை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் கோவில்பட்டியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் மற்றும் நேரு யுவகேந்திரா இணைந்து பொதுமக்கள் மத்தியில் முக கவசம் அணிவதன் அவசியம் பற்றி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் மாங்கனி திருவிழா

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்வில் ஒரு மாங்கனி தொடர்பாக நிகழ்ந்த மறக்க முடியாத நிகழ்வினை இன்றளவும் நினைவு கூரும் வகையில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது. காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பவுர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.மாங்கனித் திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, வீட்டு மாடிகளில் நின்றுகொண்டு இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து […]