டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 இலவச மாதிரி தேர்வு; தூத்துக்குடியில் 17-ம் தேதி நடக்கிறது

தூத்துக்குடி நூலகத்தில் 17-ம் தேதி நடக்கிறது டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு!
தூத்துக்குடி நூலகத்தில் 17-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட மைய நூலகர் ராம்சங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு வருகிற 17-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.
இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள், 94880 71114, 99523 84714 ஆகிய எண்களில் அலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். தொடர்ந்து தேர்வு நடைபெறும் நாளில் மாதிரி தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது,
