• June 8, 2025

கோவில்பட்டியில் முககவசம் அணிவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு

 கோவில்பட்டியில் முககவசம் அணிவதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களிள் முக கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் முக கவசம் அணிவதில் அலட்சியம் காட்டி வருகிறார்கள். போலீசார் அபராதம் விதிக்கிறார்கள என்றால் முக கவசம் அணியலாம் என்ற மனநிலை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.


இந்த நிலையில் கோவில்பட்டியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் மற்றும் நேரு யுவகேந்திரா இணைந்து பொதுமக்கள் மத்தியில் முக கவசம் அணிவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு உண்டாக்கினார்கள்.
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் முன்பு நின்றபடி அந்த வழியாக வந்தவர்களிடம் முக கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் அவ்கர்க்ளுக்கு முக கவசத்தையும் இலவசமாக கொடுத்து அணிந்து செல்லும்படி செய்தனர். அவர்களுடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி கலந்து கொண்டு பொது மக்களுக்கு முக கவசம் வழங்கினார். பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ்களில் ஏறி பயணிகளுக்கு முக கவசம் வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், “அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் 60 வயதுக்கு மேற்பட்டோர் கண்டிப்பாக சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் நிறுவன தலைவர் தேன் ராஜா ,நேருயுவ கேந்திரா மன்ற ஒருங்கிணைப்பாளர் விஜயன், ஆக்டிவ் மைண்ட்ஸ் நிர்வாகிகள் முத்து மாரியப்பன், ராமசுப்ரமணியன், மேற்பார்வையாளர் மாடசாமி, ராம்கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *