கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு அருகே பன்னீர்குளம் தென்னம்பட்டி காட்டுப்பகுதியில் கடந்த 15-ந்தேதி பெண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கடம்பூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இறந்து கிடந்தவர் சிவகங்கை மாவட்டம் வலையூரான்பட்டியை சேர்ந்த ராஜாமணி என்பவர் மனைவி சித்ரா (வயது 45) என்பதும், அவரை கயத்தாறு அருகே தென்னம்பட்டி கோபாலபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற தர்மர் (55), தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்தது.இதையடுத்து தர்மரை போலீசார் […]
மத்திய அரசால் நடத்தப்படும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வில் கோவில்பட்டி புதுக்கிராமம் இல்லத்தார் நடுநிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்றனர் இதில் மாணவிகள் நவினஅரசி , ஜெயஸ்ரீ ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பள்ளிச் செயலர் சோ. சங்கரன் பரிசு வழங்கி பாராட்டினார். வாழ்வில் மேன்மேலும் முன்னேற தலைமை ஆசிரியை. மா.இசக்கியம்மாள், மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தார்கள
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கான கலாம் 3.0 என்ற தலைப்பில் உயர் கல்விக்கான வேலைவாய்ப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் ஜெயபிரகாஷ் , நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா அனைவரையும் வரவேற்றார். உயர் கல்விக்கான […]
தூத்துக்குடியில் கொரோனா தொற்று தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் இலவச தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை காலை தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்தியாவின் 75 ஆவது சுதந்திர […]
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். ஆனால் ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை.இதையடுத்து இரண்டாம் பாகத்தை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயன்றுவந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் […]
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் இந்த ஆண்டு சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் 2022 சதுரங்கப் போட்டியில் தமிழகத்தில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.கடந்த 1977ஆம் ஆண்டு முதல் இப்போட்டி நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 43 செஸ் ஒலிம்பியாட் சர்வதேச போட்டிகளில் ஒரு முறை கூட இந்தியாவில் நடைபெறவில்லை. ஆனால் தற்போது 44வது சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பு செஸ் ஒலிம்பியாட் 2022 தற்போது இந்தியாவில் அதிலும், தமிழகத்தின் […]
தூத்துக்குடி தாமஸ் நகர் பகுதியை சேர்ந்த ஜெயசுந்தர் (வயது 50) என்பவர் அதிகாலை தனது இரு சக்கர வாகனத்தில் லயன்ஸ் டவுன் ஜங்ஷன் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது புல்லட்டில் வந்த மர்ம நபர்கள் ஜெயசுந்தரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றனர்.இதுகுறித்து ஜெயசுந்தர் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார்புரம் பகுதியை […]
பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி மெயின்ரோட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தி.மு.க.வினர் நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், நகர்மன்ற உறுப்பினர்கள் ராமர், தவமணி, சுரேஷ் வர்த்தக அணி நிர்வாகி ராஜகுரு, பொறியாளர் அணி ரமேஷ், இளைஞரணி மகேந்திரன், அமலிபிரகாஷ், சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. சார்பில் ஊராட்சி […]
நடப்பு ஆண்டிற்கான இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களில் இருக்கும் மையங்களில் இந்த தேர்வு நடைபெறும். தூத்துக்குடி மாவட்டத்தில் 3 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் 360 பேர், அரசூர் வி.வி. பொறியியல் கல்லூரியில் 1008 பேர், தூத்துக்குடி முத்தம்மாள் காலனி அழகர் பப்ளிக் […]
கோவில்பட்டி அருகே கழுகுமலையில் தென் பழனி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற குடவரை கோவிலான கழுகாசலமூர்த்தி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் தினந்தோறும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதான உணவு வகைகளின் தரம், உணவு தயாரிக்கும் முறை, வழங்கும் முறை மற்றும் உணவு தயாரிப்பு கூடங்களின் சுகாதாரம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணைத்தியத்தினால் போக் (BHOG) சான்றிதழ் என்று அழைக்கப்படும் சுகாதார சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதார தர […]