• June 8, 2025

கோவில்பட்டியில் உயர் கல்விக்கான வேலைவாய்ப்பு கருத்தரங்கு

 கோவில்பட்டியில் உயர் கல்விக்கான வேலைவாய்ப்பு கருத்தரங்கு

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கான கலாம் 3.0 என்ற தலைப்பில் உயர் கல்விக்கான வேலைவாய்ப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் ஜெயபிரகாஷ் , நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா அனைவரையும் வரவேற்றார்.

உயர் கல்விக்கான வேலைவாய்ப்பு கருத்தரங்கை ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் ஆசியாபார்ம்ஸ் பாபு தொடக்கி வைத்து பேசினார். ஸ்டெப் 2 சக்ஸஸ் அமைப்பின் நிறுவனர் டென்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.
கருத்தரங்கில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்து செல்வம், கிருஷ்ணசாமி, மாரியப்பன், பூல்பாண்டி, நடராஜன், காளியப்பன், தயாள்சங்கர், இளங்கோ, ரமேஷ் குமார் உள்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் மணிகண்ட மூர்த்தி நன்றி கூறினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *