• June 8, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 3 மையங்களில் நீட் தேர்வு

 தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 3 மையங்களில் நீட் தேர்வு

நடப்பு ஆண்டிற்கான இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களில் இருக்கும் மையங்களில் இந்த தேர்வு நடைபெறும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் 360 பேர், அரசூர் வி.வி. பொறியியல் கல்லூரியில் 1008 பேர், தூத்துக்குடி முத்தம்மாள் காலனி அழகர் பப்ளிக் பள்ளியில் 502 பேர் என மொத்தம் 1870 மாணவ, மாணவியர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு மையங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *