• June 8, 2025

கோவில்பட்டியில் காமராஜர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவிப்பு

 கோவில்பட்டியில் காமராஜர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவிப்பு

காமராஜர் சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்த காட்சி.

பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி மெயின்ரோட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க.வினர் நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், நகர்மன்ற உறுப்பினர்கள் ராமர், தவமணி, சுரேஷ் வர்த்தக அணி நிர்வாகி ராஜகுரு, பொறியாளர் அணி ரமேஷ், இளைஞரணி மகேந்திரன், அமலிபிரகாஷ், சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. சார்பில் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பழனிசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் கோவில்பட்டி ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் வேலுமணி, ஆபிராகம் அய்யாத்துரை, பெருமாள்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்; மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கே.பி.ராஜகோபால் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் அக்கட்சி சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளாரும், நகர் மன்ற துணை தலைவருமான ஆர்.எஸ்.ரமேஷ், இளைஞரணி செயலாளர் விநாயகா.ஜி.ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் பால்ராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தெய்வேந்திரன், மத்திய ஒன்றிய செயலாளர் சரவணன, நகர இளைஞரணி செயலாளர் முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க சார்பில் அக்கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜா, நகரச்செயலாளர் போலீஸ் சீனிவாசன், வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் நீதிப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தென்மண்டல பொறுப்பாளர் சுந்தர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

.பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் அருண்பாண்டியன், நாம் தமிழர் கட்சி சார்பில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ரவிக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *