தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சி.எஸ்.ஆர் நிதியுதவியின் கீழ் மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஓய்வு பெற்ற மாநகராட்சிப் பணியாளர்களுக்கு சேமநலநிதி வட்டித் தொகை வழங்கும் விழா மாநகராட்சி மாநாடு மையத்தில் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு, சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களையும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சமூகப் பொறுப்பு நிதியின் […]
தூத்துக்குடி, பி அண்ட் டி காலனி 12வது தெருவில், ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள திறந்தவெளி விளையாட்டு திடல் திறப்பு விழா நடைபெற்றது. இதில், தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு திறந்தவெளி விளையாட்டு திடலை திறந்து வைத்தார். தொடர்ந்து, விளையாட்டு சாதனங்களை இளைஞர்களுக்கு கனிமொழி எம்.பி வழங்கினார். இந்நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா […]
தூத்துக்குடியில் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 270 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். சில ஆண்டுகளாக மீன்கள் சரிவர கிடைக்காததால் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 10-ம் தேதி முதல் விசைப்படகு மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 6-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் […]
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 22-ந்தேதி(சனிக்கிழமை) நடக்கிறது தூத்துக்குடி மில்லர்புரம் வ.உ.சி.கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம் நடக்கிறது., *100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் * 5,000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் *வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான […]
தூத்துக்குடி மாவட்டத்தில் 56 வழித்தடங்களில் புதிய மினி பஸ்கள் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு அரசு அரசாணை எண். 33 உள்(போக்குவரத்து) நாள் 23.01.2025-ன் படி தூத்துக்குடி மாவட்ட அரசிதழில் தெரிவிக்கப்பட்ட 56 வழித்தடங்களில் சிற்றுந்து (மினி பஸ் ) இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினிப்பேருந்துக்கான SCPA விண்ணப்பப்படிவத்தினை Parivahan மூலமாக விண்ணப்பித்து ஆன்லைனில் கட்டணம் ரூ.1500+100+1600/- செலுத்தி விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாள் நடைபெற்றது. மாவடடத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த்திருந்த பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 356 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரியநடவடிக்கை […]
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மகளிருக்கான மார்பக புற்று நோய் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வஉசி கல்லூரி அருகில் உள்ள பிங்க் பார்க்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்து பேசியதாவது:_ பெண்களின் நலனுக்காக நடத்தப்படும் இந்த முகாமை பெண்கள் தங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள. […]
சேவைக் குறைபாடு காரணமாக ரிசார்ட் நிறுவனம் 4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது தூத்துக்குடி தனசேகரன் நகரைச்; சார்ந்த கபிலன் ரத்தின சபாபதி என்பவர் சென்னையிலுள்ள ஒரு நிறுவனத்திடம்; 3.2 லட்சம் செலுத்தி கொடைக்கானலில் ஒரு ரிசார்ட்டில் தங்குவதற்காக உறுப்பினராக சேர்ந்துள்ளார். அங்கு 2 ஆண்டுகளுக்கு பராமரிப்பு கட்டணம் இல்லாமல் தங்கலாம் என அந்த நிறுவனம் கூறியிருந்தது. ஆனால் புகார்தாரர் அங்கு தங்காமலேயே முதலாண்டுக்கான பராமரிப்பு […]
இந்திய விண்வெளி ஆய்வு நிரோனம் (இஸ்ரோ) தலைவராக பொறுப்பேற்ற நாராயணன் தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அவருக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. சக இஸ்ரோ அதிகாரிகள், அலுவலர்களும் நாராயணனை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் நாராயணன் செய்தியாளர்களிடம்கூறியதாவது:- 1947 இல் சுதந்திரம் அடைந்த பிறகு சாதாரண நாடாக இருந்த இந்தியா தற்போது பெரிய அளவில் முன்னேறி உள்ளது. நம் நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக […]
இந்தியாவின் 76வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது, சென்னையில் நடந்த விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் ஆர்,.என்.ரவி தேசிய கொடியேற்றினார். தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தருவை மைதானம் விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கக. இளம்பகவத் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் இளம்பகவத் ஏற்றுக்கொண்டார். பின்னர் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
