• May 23, 2025

தூத்துக்குடியில் 22 ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

 தூத்துக்குடியில் 22 ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 22-ந்தேதி(சனிக்கிழமை) நடக்கிறது தூத்துக்குடி மில்லர்புரம் வ.உ.சி.கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம் நடக்கிறது.,

*100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள்

* 5,000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

*வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பம் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும்.

*இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்

கல்வித்தகுதிகள்

8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை / ஐ.டி.ஐ. / டிப்ளமோ / நர்சிங் / பார்மசி பொறியியல் பட்டப் படிப்பு வயது வரம்பு 18-40 வயது வரை

வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள வேலை நாடுநர்கள் Google Link-ல் https://forms.gle/pEyqpjfqqhshrH616 லிங்க் ஐ கிளிக் செய்து  பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் தனியார்துறை வேலைவாய்ப்புகள் குறித்து தொடர்ந்து அறிந்து கொள்ள https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளவும்.

விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் கல்விச் சான்றிதழ்கள் ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் சுயவிபர குறிப்புகளுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு : 0461-2340159 என்ற நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம்,

மேற்கண்ட தகவல்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்து உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *