தே.மு.தி.க.நிறுவன தலைவர்மற்றும் பொதுசெயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக என்.சுப்பையா என்ற சுரேஷ் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு மாவட்டம், ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் ஒத்துழைப்பு தந்து கழகம் வளர்ச்சி பெற பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.வடக்கு மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம் , […]
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (மே 13) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (மே 13) வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் நடைபெறுகிறது. இதில், பல தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதால், 10-ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்பு, […]
தூத்துக்குடி தாளமுத்துநகர் வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மனைவி காளீஸ்வரி. இவர்களுக்கு அனுசியா (வயது 14), மற்றும் 2 வயதில் பெண் குழந்தை உள்பட 6 குழந்தைகள் உள்ளனர்.காளீஸ்வரியின் 2 வயது பெண் குழந்தைக்காக வீட்டில் சேலையால் தொட்டில் கட்டப்பட்டு இருந்தது. நேற்று மதியம் அனுசியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். அவள் தனது தங்கைக்காக கட்டப்பட்டு இருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டு இருந்தாள்.அப்போது, எதிர்பாராதவிதமாக தொட்டில் சேலை அனுசியா கழுத்தில் சிக்கி […]
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் 13 மற்றும் 14ந் தேதி வீரசக்க தேவி ஆலய திருவிழா நடக்கிறது. இதனை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும், நாளை (வியாழக்கிழமை) 12 ந்தேதி மாலை 6 மணி முதல் 15ந் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144ன் கீழ் […]
வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசுகளான வீமராஜா, வீரசக்கம்மாள், ராஜமல்லம்மாள், பாஞ்சாலம்மாள், இந்துமதி, ரவீந்திரன், முத்துக்குமார், ஆகியோர் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் வந்தனர், அவர்கள் கலெக்டர் செந்தில்ராஜிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-வீரபாண்டியன் கட்டபொம்மனின் நேரடி வாரிசுகள் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள சந்ததியினர் குடியிருப்பில் வசித்து வருகிறோம். பாஞ்சாலங்குறிச்சி, தொல்லியல் துறை கட்டுபாட்டில் இருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் பழைய பாரம்பரிய நினைவு சின்னங்களை அழிப்பது சேதப்படுத்துவது மற்றும் தொல்லியல்துறை விதிகளை மீறி கட்டிடம் கட்டுவது போன்ற […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2 வாரமாக தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு உள்ளது.தூத்துக்குடி சுகாதார மாவட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி மாநகரில் 200 இடங்களிலும், புறநகர் பகுதியில் 436 இடங்களிலும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 365 இடங்களிலும் நேற்று சிறப்பு முகாம் நடந்தது. இது தவிர 416 வேன்கள் மூலம் சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தினர். இதனால் மாவட்டம் முழுவதும் […]
தூத்துக்குடி எப்.சி.ஐ. குடோன் அருகே இன்று அதிகாலை நேரத்தில் மீன்கள் ஏற்றி வந்த ஒரு சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.அந்த வேனில் இருந்த மீன்கள் சாலையில் கொட்டின. போக்குவரத்துக்கு இடையூறாக மீன்கள் சாலையில் குவிந்து கிடந்தன. வேன் டிரைவர் செய்வதறியாமல் திகைத்தபடி இருந்தார்.அப்போது அந்த வழியாக இரவு பணி முடித்து வந்த போலீஸ்காரர் ஸ்டாலின் என்பவர் சற்றும் யோசிக்காமல் சாலையில் கிடந்த மீன்களை அள்ளி கொட்டினார்.சிறிது நேரம் கழித்து மீன்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அந்த வேன் கிளம்பி […]
சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த மத்திய இணை மந்திரி முருகன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தி.மு.க. அரசு தமிழக மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் செய்ய தவறி இருக்கிறது. சில பொய்யான தகவல்களை சொல்லி மக்களிடம் வாக்குகளை வாங்கி ஓராண்டு ஆகியும் அதை செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது.தமிழகத்தில் பல மாவட்டங்களில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி மயானங்கள் என்கின்ற நிலையில் இது எப்படி திராவிட மாடல் ஆட்சியாகும். சமத்துவம் என்ற […]
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்திய 29 இருசக்கர வாகனங்கள் மற்றும் 16 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 45 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகிற 24.5.2022 காலை 10 மணிக்கு தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது. மேற்படி ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை பொதுமக்கள் 9.5.2022 அன்று முதல் 21.5.2022 அன்று வரை (காலை 10 மணி முதல் மாலை […]
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022