கட்சியில் புதிய பதவி: தூத்துக்குடி வந்த கனிமொழி எம்.பி.க்கு வரவேற்பு

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட கனிமொழி எம்.பி, சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வாகைக்குளம் வந்தடைந்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில், எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகர தி,மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலையில் பின்னர் மாநகர எல்லையான எப்.சி.ஐ. குடோன் அருகில் ராஜஸ்தான் மேளதாளத்துடன் மகளிர் அணி சார்பில் கனிமொழி எம்.பி.க்கு பூரண கும்ப மரியாதை வழங்கி உற்சாகமாக வரவேற்பளித்த]

தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில்ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ,
யூனியன் சேர்மன். ரமேஷ் , மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் கனிமொழிக்கு பூங்கொத்து அளித்து வரவேற்றனர்
