5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஸ்ரீ சீரடி சாய் பிளஸ்ஸிங் அறக்கட்டளை

சென்னை முகப்பேர் வெள்ளாளர் தெருவில் இயங்கி வரும் ஸ்ரீ சீரடி சாய் பிளஸ்ஸிங் அறக்கட்டளை தனது மக்கள் பணியை 4 ஆண்டுகள் நிறைவு செய்து 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதையொட்டி வருகிற 15-ந் தேதி சனிக்கிழமை கலை 1௦ மணி அளவில் விழா நடத்தப்படுகிறது. முகப்பேர் வெள்ளாள தெருவில் உள்ள சக்தி பிரசன்ன விநாயகர் கோவில் அருகே அமைக்கப்படும் மேடையில் விழா நடக்கிறது;. ஸ்ரீ சீரடி சாய் பிளஸ்ஸிங் அறக்கட்டளை அறங்காவலர் குழு தலைவர் முகப்பேர் என்.இளஞ்செழியன் தலைமை தாங்குகிறார்.
முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க.அமைப்பு செயலாளருமான பா.பெஞ்சமின் விழாவை தொடக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். நடிகை லதா குத்துவிளக்கு ஏற்றி வைத்து அன்னதானத்தை தொடக்கி வைக்கிறார்.
விழாவில் திராவிட இயக்க ஆய்வாளர் துரை கருணா, தொழில் அதிபர்கள் எஸ்.கமலக்கண்ணன், லயன் ஏ.பாலாஜி, வக்கீல் ஏ.முகமது அனிபா. வடபழனி ஸ்ரிலதிரம்பிகா யோக பீடம் நிறுவனர், அறங்காவலர் வி.எஸ்.துறை சிவாச்சாரியார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மதுரவாயல் பகுதி கழக செயலாளர் என்.எம்.இமானுவேல் வரவேற்று பேசுகிறார்.
ஸ்ரீ சீரடி சாய் பிளஸ்ஸிங் அறக்கட்டளை அறங்காவலர்கள் இ.துரைமுருகன், பாடி எம்.குமார், டி.வீராசாமி, என்.மணிமாறன் உள்பட பலர் விழாவில் கலந்து கொள்கிறார்கள்..
