• June 7, 2025

சென்னையில் இருந்து தசரா கொண்டாட சாத்தான்குளம் வந்தவர்வெட்டிக்கொலை

 சென்னையில் இருந்து தசரா கொண்டாட சாத்தான்குளம் வந்தவர்வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலுள்ள பள்ளங்கிணறு தெற்கு தெருவை சேர்ந்தவர் பட்டு ராஜா மகன் ரேவந்த் குமார் (வயது 26 ). இவர் சென்னையில் பழைய இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 4 ஆம் தேதி தசரா திருவிழாவிற்காக சொந்த ஊர் வந்தார். இந்த நிலையில் சாத்தான்குளத்தில் இருந்து செட்டிகுளம் நொச்சிகுளம் விலக்கு அருகில் உள்ள கல்லறை தோட்டம் அருகில் தலை மற்றும் கழுத்து கைகளில் காயத்துடன் இறந்துகிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் விரைந்து செண்டு அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளங்கிணற்றை சேர்ந்த சாமுவேல் மகன் சித்திரை ஜெகன் என்ற ஜெகன் (36), அவரது தம்பி சுடலை (34) ஆறுமுகம் மகன் முத்துசாமி (40) ஆகியோர் ரேவந்த் குமார் அழைத்து சென்று வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.
கடந்த 4 ஆண்டுகள் முன்பு ரேவந்த் குமாரின் சித்தப்பா செந்தில்வேல் என்பவரை சித்திரஜெகன் உட்பட இரண்டு பேர் தசரா திருவிழா தொடர்பாக வெட்டிக் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக இருவருக்கும் பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.
மேலும் பள்ளங்கிணறு ஊரில் இரண்டு தசரா குழுக்கள் செயல்பட்டு வந்துள்ளது. அதில் ஓர் குழுவில் ரேவந்த் குமார் தீவிரமாக செயல்பட்டதாக தெரிகிறது. ரேவந்த்குமார் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்ததால் சித்தப்பாவை கொலை செய்ததில் தன்னை கொலை செய்து விடுவார் என்ற அச்சத்தில் ஜெகன் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சித்திரைஜெகன் அவரது சகோதரர் சுடலை, உறவினர் முத்துசாமி ஆகியோர் நொச்சிக்குளம் விலக்கில் உள்ள கல்லறைதோட்டம் அருகில் ரேவந்த் குமாரை வரவழைத்து அவரை சரமாரியாக வெட்டியதும் இதில் தலை கை கழுத்து பகுதியில் வெட்டுப்பட்ட ரேவந்த் குமார் சம்பவ இடத்தில் இறந்து போனது தெரியவந்தது. சம்பவ இடத்தை சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் பார்வையிட்டார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *