• June 7, 2025

பனங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா கைது

 பனங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா கைது

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி மஞ்சங்குளம் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை(வயது 26) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பனங்காட்டு படை கட்சி நிறுவன தலைவர் ராக்கெட் ராஜாவை இன்று வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நெல்லை போலீசார் கைது செய்தனர்.
மும்பையில் இருந்து விமானம் மூலம் வருவதை அறிந்து நெல்லை போலீசார் திருவனனந்தபுரம் விமான நிலையம் சென்று ராக்கெட் ராஜாவை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
இவர் மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் தங்கள் காவலில் விசாரித்து பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் என்று தெரிகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *