தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி,இந்தி திணிப்பு எதிர்ப்பு பிரசாரம் தி.மு.க. சார்பில் நடைபெற்று வருகிறது.இந்தியை கட்டாயமாக திணிக்க முயலும் மத்திய பா.ஜ.க. அரசின் முயற்சி எவ்வாறெல்லாம் தமிழையும், தமிழ்நாட்டு மக்களையும் பாதிக்கும் என்பது பற்றிய விளக்கங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை தூத்துக்குடி எஸ்.எஸ். பிள்ளை மார்க்கெட் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் மக்களுக்கு வழங்கியபோது. மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் சென்றனர்
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் மாநகரத்திற்குள் வராமல் இருப்பதற்காக புறவழிச் சாலையில் நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.மேலும் மழையினால் பாதிப்படையும் மாநகரின் பிரதான பகுதிகளான கங்காபரமேஸ்வரி நகர், மச்சாது நகர், முத்தம்மாள் காலனி, திரவிய ரத்ன நகர், நிகிலேசன் நகர், முத்து கிருஷ்ணாபுரம், கதிர்வேல் நகர், ஆகிய பகுதிகளுக்கு மழை நீர் வரும் புறநகர் பகுதிகளை பார்வையிட்டார்.சங்கரப்பேரி குளத்தையும், நீர் வழித் தடத்தையும் ஆய்வு செய்தார். “மழை நீர் […]
தூத்துக்குடி மாவட்டம் கீழமங்கலம் பகுதியைச் சேர்ந்த இசக்கி மகன் சுடலைமாடன் (57) என்பவர் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை கடந்த 2020 ஆண்டு பாலியல் தொல்லை செய்துள்ளார்.இதுகுறித்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சுடலைமாடன் என்பவரை கைது செய்தனரஇவ்வழக்கை கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள் புலன் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை காலை 6 மணி வரையிலான நேற்றைய மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- தூத்துக்குடி -19ஸ்ரீவைகுண்டம் : 76திருச்செந்தூர் : 13காயல்பட்டினம் : 99குலசேகரப்பட்டினம் : 7சாத்தான்குளம் : 5கோவில்பட்டி : 1 கழுகுமலை: 9 கயத்தார் : 78கடம்பூர் : 82எட்டயபுரம் : 28 விளாத்திகுளம் 28 காடல்குடி 28 சூரங்குடி 28 வைப்பார் : 28 ஓட்டப்பிடாரம் : 42மணியாச்சி : 12கீழஅரசடி : 8வேதநாதம் : […]
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாளை கடைப்பிடித்தனர். அந்த வகையில் தமிழகத்திலும், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மக்கள், மறைந்த தங்கள் உறவுகளின் கல்லறைகளில் சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.மதுரை மாவட்டத்தில் பங்கு ஆலயங்களைச் சேர்ந்த அனைத்து கல்லறைத் தோட்டங்களிலும் மறைந்தவர்களின் ஆன்ம சாந்திக்காக சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள கல்லறை தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் அதிகாலை முதலே தங்கள் முன்னோர்கள் கல்லறைகளில் மலர்களை தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் ஜெபம் செய்தனர்.அதே போல் கோவையில் உள்ள […]
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.பலத்த மழை காரணமாக தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழைநீரை அகற்றுவதற்கான பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.தூத்துக்குடியில் நேற்று இரவு பெய்த கனமழையால் டூவிபுரம், பண்டுகரை சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதியை அமைச்சர் கீதாஜீவன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேங்கிய தண்ணீரை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.இதேபோல் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 7 பேர் மீது ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடந்த 7.10.2022 அன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதிச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பொன்னம்மாள் (45) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாள் மற்றும் கம்பால் தாக்கி கொலை செய்த வழக்கில் மூக்கன் மகன் இசக்கிப்பாண்டி (32) மற்றும் சிலரை போலீசார் கைது செய்தனர்.அதேபோன்று கடந்த 1.10.2022 அன்று சாத்தான்குளம் மகாராஜா கோவில் தெருவை […]
தமிழக காவல்துறையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 31.10.1997 அன்று இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 61 தலைமை காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆணை பிறப்பித்துள்ளார். காவல்துறையில் 25 ஆண்டுகளாக சிறந்த முறையில் பணியாற்றி சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ள 61 தலைமை காவலர்களும் சிறப்பாக பணியாற்றுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்தினார்
தூத்துக்குடியில், திருச்செந்தூர் ரவுண்டானா பகுதியில் இன்று முதல் 11-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-தூத்துக்குடியில் திருச்செந்தூர், வஉசி துறைமுகம், ஸ்பிக் செல்லும் ரவுண்டானாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது மேற்படி பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சாலைபணிகள் முடிக்கப்பட்டு மத்தியில் 32 ராட்சத கான்கிரிட் தூண்கள் அதற்கான இடத்தில் பொருத்தும் பணி மிகவும் முக்கியமானது ஆகும். மிகுந்த கவனத்துடன் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் ஆண்டு தோறும் நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் என்றும் அன்றை தினம் தமிழகத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என அறிவித்ததை தொடர்ந்து 1.11.2022 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ள இக் கிராம சபைக் கூட்டத்தின் போது அனைத்துத்துறை தொடர்பான கண்காட்சிகள், கொரோனா பெருந்தொற்று […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
