இந்தி திணிப்பு எதிர்ப்பு பிரசாரத்தில் அமைச்சர் கீதாஜீவன்

தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி,இந்தி திணிப்பு எதிர்ப்பு பிரசாரம் தி.மு.க. சார்பில் நடைபெற்று வருகிறது.
இந்தியை கட்டாயமாக திணிக்க முயலும் மத்திய பா.ஜ.க. அரசின் முயற்சி எவ்வாறெல்லாம் தமிழையும், தமிழ்நாட்டு மக்களையும் பாதிக்கும் என்பது பற்றிய விளக்கங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை தூத்துக்குடி எஸ்.எஸ். பிள்ளை மார்க்கெட் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் மக்களுக்கு வழங்கியபோது. மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் சென்றனர்
