• June 7, 2025

தூத்துக்குடி புறவழிச்சாலையில் வடிகால் அமைக்கும் பணி; மேயர் பார்வையிட்டார்

 தூத்துக்குடி புறவழிச்சாலையில் வடிகால் அமைக்கும் பணி; மேயர் பார்வையிட்டார்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் மாநகரத்திற்குள் வராமல் இருப்பதற்காக புறவழிச் சாலையில் நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.
மேலும் மழையினால் பாதிப்படையும் மாநகரின் பிரதான பகுதிகளான கங்காபரமேஸ்வரி நகர், மச்சாது நகர், முத்தம்மாள் காலனி, திரவிய ரத்ன நகர், நிகிலேசன் நகர், முத்து கிருஷ்ணாபுரம், கதிர்வேல் நகர், ஆகிய பகுதிகளுக்கு மழை நீர் வரும் புறநகர் பகுதிகளை பார்வையிட்டார்.
சங்கரப்பேரி குளத்தையும், நீர் வழித் தடத்தையும் ஆய்வு செய்தார். “மழை நீர் பெருமளவு ஊருக்குள் வருவதை தடுக்க குளத்தை ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தவும், பழைய நீர் வழித் தடங்களை தூர் வாரவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *