சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் கைதானவருக்கு 20 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் கீழமங்கலம் பகுதியைச் சேர்ந்த இசக்கி மகன் சுடலைமாடன் (57) என்பவர் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை கடந்த 2020 ஆண்டு பாலியல் தொல்லை செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சுடலைமாடன் என்பவரை கைது செய்தனர
இவ்வழக்கை கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள் புலன் விசாரணை செய்து கடந்த 29.2.2020 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சாமிநாதன் இன்று (4.11.2022) குற்றவாளியான சுடலைமாடனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
